செப்டெம்பர் 6ஆம் திகதி வரை ஊரடங்குச் சட்டம் நீடிப்பு!

நாட்டில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை தொடர்ந்து நீடிப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தீர்மானித்துள்ளார். எதிர்வரும் 30ஆம் திகதியுடன் தனிமைப்படுத்தல் ஊரடங்கு காலம் நிறைவடையவுள்ள நிலையில், செப்டெம்பர் 6ஆம் திகதி அதிகாலை 4 மணிவரை ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்படுகின்றது என ஜனாதிபதி... Read more »

யாழ்.மாவட்டத்தில் மோசமாகும் நிலைமை! மாவட்டத்தில் 318 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.. |

யாழ்.மாவட்டத்தில் 318 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக யாழ்.மாவட்டச் செயலர் க.மகேஸன் கூறியுள்ளார். நேற்று முன்தினம் 239 பேருக்கு தொற்று உறுதியான நிலையில் நேற்றய நிலவம் தொடர்பாக கேட்டபோதே மாவட்டச் செயலர் 318 பேருக்கு தொற்று உறுதியானதாக கூறியுள்ளார். இதேவேளை மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை... Read more »

இராணுவம் அமைக்கும் வளைவை உடன் நிறுத்தாவிடின் ஒதுக்கப்படும்…!வேளமாலிகிதன்.

இரணைமடு சந்தி பகுதியில் வீதியில் இராணுவத்தினரால் அமைக்கப்படும் கட்டுமான பணிகள் நிறுத்தப்படாவிடின் பிரதேச சபைகள் சட்டத்தின் கீழ் இடிக்க முடியும் என கரைச்சி பிரதேச சபை தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதன் தெரிவித்துள்ளார். நேற்று  பிற்பகல் 4 மணியளவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு... Read more »

புத்தசாசன அமைச்சில் பணியாற்றிய மேலும் ஒரு பெரும்பான்மை இனத்தவரே மாவட்டச் செயலாளராக மீண்டும் நியமனம்.. |

புத்தசாசன அமைச்சில் பணியாற்றிவவுனியா மாவட்டச் செயலராக கடமையாற்றிய சமன் பந்துலசேனா மாகாண பிரதம செயலாளராக கடமையேற்றிருக்கும் நிலையில் புதிய மாவட்டச் செயலராக புத்தசாசன அமைச்சில் பணியாற்றிய சரத் சந்திர என்பவர் நியமிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அரச அதிபராக கடமையாற்றிய சமன்பந்துலசேன வடமாகாண பிரதமசெயலாளராக பதவி உயர்வுபெற்றுச்சென்றிருந்தார்.... Read more »

நாட்டை மேலும் ஒருவாரம் முடக்க கோரிக்கை, திறப்பதில் அரசு விடாப்பிடி.. |

நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டிருக்கும் ஊரடங்குச் சட்டத்தை இம்மாதம் 30ம் திகதியுடன் தளர்த்தாமல் மேலும் ஒரு வாரத்திற்கு நீடிக்குமாறு சுகாதார பிரிவினர் கோரும் நிலையில் எனினும் 30ம் திகதி ஊரடங்கை தளர்த்துவதில் அரசு தீவிரமாக உள்ளதாக கூறப்படுகிறது.  அத்தியாவசிய சேவைகளை தொடந்து சில கட்டுப்பாடுகளுடன் முன்னெடுக்கவும்... Read more »

கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் சிகிச்சை பெற்றுவந்த 6 மாத குழந்தை உயிரிழப்பு! |

திடீர் சுகயீனம் காரணமான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 6 மாத குழந்தை கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளது. வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குழந்தைக்கு பீ.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டபொது தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து வைத்தியசாலையின் தனிமைப்படுத்தல் விடுதியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது. Read more »

முக்கியமான 4 தடுப்பூசிகளின் செயற்றிறன் தொடர்பான ஆய்வில் உறுதியாகியுள்ள விடயம் –

50 வயதிற்கு குறைந்த தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளாத கோவிட் தொற்றாளர்களின் மரணமானது சைனோபாம் தடுப்பூசிகளைப் பெற்றுக் கொண்டவர்களை விடவும் 3.8 மடங்கு அதிகமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் நீலிகா மளவிகே தெரிவித்துள்ளார். இது தொடர்பில் தனது டுவிட்டர் பக்கத்தில்... Read more »

ஒரு கிலோ சீனியின் விலை 50 ரூபாயினால் அதிகரிப்பு! தன்னால் எதுவும் செய்ய முடியாதாம், மண்டையை சொறியும் அமைச்சர்.. |

ஒரு கிலோ சீனியின் விலை 50 ரூபாயினால் அதிகரித்துள்ளது. கடந்த வாரம் 160 ரூபாயாக இருந்த ஒரு கிலோ சீனியின் விலை இந்த வாரம் 210 ஆக அதிகரித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு நியாயமற்றது என்றாலும், அது குறித்து தன்னால் எதுவும் செய்ய... Read more »

அலுவலக ஊழியருக்கு கொரோனா தொற்று! சுய தீர்மானத்தில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்ட மாவட்டச் செயலர்,!

யாழ்.மாவட்டச் செயலரின் அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் யாழ்.மாவட்டச் செயலர் க.மகேஸன் தாமாகவே சுயதனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். தனது அலுவலகத்தில் ஒரு பணியாளருக்கு தொற்று உறுதியான நிலையில் மற்றவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக தனது வீட்டிலிருந்து மாவட்ட செயலர்... Read more »

யாழ்.நயினாதீவில் மரணச் சடங்கில் கலந்துகொண்டவர்களுக்கு திடீர் சுகயீனம்! பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி.. |

யாழ்.நயினாதீவில் மரணச் சடங்கில் கலந்து கொண்டிருந்த சிலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, கடந்த திங்கள் கிழமை நயினாதீவில் வயோதிப பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். அவருடைய மரணச் சடங்கில் கிராம மக்கள் கலந்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் மரணச்சடங்கிற்கு மறுநாளே... Read more »