யாழ்.வலி,மேற்கு பிரதேசசபையின் தலைமை காரியாலய ஊழியர்களுக்க தொற்று!

யாழ்.வலி,மேற்கு பிரதேசசபையின் தலைமைக் காரியாலய பணியாளர்கள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் காரியாலயம் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு தகவல்கள் கூறுகின்றன. அத்தியாவசிய தேவை கருதி சுழற்சி முறையில் பணிக்கு அழைக்கப்பட்டுவந்திருந்தனர். அவர்களில் இருவர் நோய் அறிகுறிகள் காணப்பட்ட நிலையில் பரிசோதனைக்கு... Read more »

யாழ்.சங்கானை பிரதேச செயலருக்கு கொரோனா தொற்று உறுதி! |

யாழ்.சங்கானை பிரதேச செயலர் திருமதி பிறேமினிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சிகிச்சைக்காக வைத்தியசாலை சென்றபோது கடந்த திங்கள் கிழமை அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது Read more »

வடக்கிலும் கட்சி செயற்பாடுகளை விஸ்த்தரிக்கும் கருணா அம்மான்!

கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனின் கட்சி சார்பில் வடக்கில் தேர்தல் நடவடிக்கைக்காக தொகுதி அமைப்பாளர்களை நியமிக்கும் நடவடிக்கை இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது. கடந்த பாராளுமன்ற தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் அரச கட்சியை பிரதிநிதித்துவம் செய்து போட்டியிட்ட கருணா அம்மான் எதிர்பாராத தோல்வியை... Read more »

ஜி.எல் பீரிஸுக்கு பாராட்டு கடிதம் அனுப்பியுள்ள இந்திய வெளியுறவு அமைச்சர்…!

இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இலங்கையின் புதிய வெளியுறவு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸுக்கு பாராட்டு கடிதம் அனுப்பியுள்ளார். இந்திய உயர்ஸ்தானிகராலயம் இது தொடர்பில் ட்வீட் செய்துள்ளது. அந்த ட்வீட்டின் படி, இருதரப்பு உறவுக்கு வழிகாட்டும் சிறந்த அயலுறவு,நட்புறவின் முக்கியத்துவம் மற்றும் தலைமைத்துவத்தின்... Read more »

யாழில் மேலும் ஐவர் உயிரிழப்பு …!

யாழ்ப்பாணத்தில் மேலும் 5 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் நேற்று உயிரிழந்துள்ளனர். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், உயிரிழந்த 5 பேருக்கே கொரோனாத் தொற்றுள்ளது என அறிக்கையிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், மருதடி வீதியைச் சேர்ந்த 75 வயதுடைய பெண் ஒருவரும், சங்கானையைச்... Read more »

வவுனியாவில் மேலும் 177 பேருக்கு கோவிட் தொற்று உறுதி –

வவுனியாவில் மேலும் 177 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். வவுனியாவில் இனங்காணப்பட்ட கோவிட் தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியோர், வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டோர் மற்றும் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனையின் முடிவுகள் என்பன நேற்று இரவு... Read more »

இலங்கையில் வாழும் அனைத்து முஸ்லிம்களுக்கும் நீதி அமைச்சரின் அவசர வேண்டுகோள் –

நாட்டில் உள்ள அனைத்து முஸ்லிம் மக்களும் உடனடியாக தடுப்பூசியை பெற்று நாட்டின் சுகாதார மேம்பாட்டிற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு நீதி அமைச்சர் அலி சப்ரி அவசர கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளார்.  இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், இலங்கையில் வாழ்கின்ற முஸ்லிம்களின் விகிதாசாரம் மொத்த சனத்தொகையில்... Read more »

அரசாங்கத்தின் 2000 ரூபா பணம் கிடைக்காதவர்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு…!

அரசாங்கம் வழங்கும் 2000 ரூபாய் நிவாரண பணம் கிடைக்காதவர்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறானவர்கள் தமக்கு நிவாரண பணம் கிடைக்காமை தொடர்பில் பிரதேச செயலாளர்களிடம் முறையிட முடியும். இந்த விடயத்தை பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்பிற்கான ஜனாதிபதி செயலணி தெரிவித்துள்ளது.  ... Read more »

நுவரெலியா நகருக்கு உட்பட்ட மக்களுக்கு சினோபார்ம் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை இன்று முன்னெடுப்பு..!

நுவரெலியா மாவட்டத்தில் கடுமையான மழை வானிலை நீடித்து வருகின்ற போதிலும் அதனைப் பொருட்படுத்தாது, நுவரெலியா நகருக்கு உட்பட்ட 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் நீண்டவரிசையில் காத்திருந்து சினோபார்ம் தடுப்பூசியை பெற்றுக்கொண்டதை காணமுடிந்தது. நுவரெலியா மாநகர சபையின் குடும்ப சுகாதார சேவை காரியாலயத்தில், சினோபார்ம் முதலாவதுத் தடுப்பூசி... Read more »

கலவான பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி உள்ளிட்ட 10 பேருக்கு கொரோனா –

கலவான பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி உள்ளிட்ட 10 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக கலவான பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸ் அதிகாரிகளுக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையிலேயே 10 பேருக்கு தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது. பொலிஸ் பரிசோதகர், உப பொலிஸ் பரிசோதகர் உள்ளிட்ட 10 பேருக்கே கொரோனா... Read more »