யாழ்ப்பாண அபிவிருத்தி நிதியம் ஒன்றினை உருவாக்கி அதனூடாக சேவையாற்றவுள்ளதாக வி.மணிவண்ணன் தெரிவிப்பு..!(வீடியோ)

யாழ்ப்பாணம் மாவட்டத்திறக்கு என ஒரு அபிவிருத்தி நிதியத்தை உருவாக்கி அதனூடாக மக்களினுடைய பல்வேறு பொருளாதார பிரச்சினைகளை தீர்ப்பதற்க்கு நடவடிக்கை எடுக்கப்போவதாக தமிழ் மக்கள் கூட்டணியின் முதன்மை வேட்பாளரும் சட்டத்தரணியும், முன்னாள் யாழ்ப்பாணம் மாநகர சபை மேஜருமான விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்   யாழ்ப்பாணம் வடமராட்சி... Read more »

காணி பொலிஸ் அதிகாரங்கள் தமிழ் மக்களுக்கு தேவை – சிங்கள இளைஞர்கள் எடுத்துரைப்பு!

காணி பொலிஸ் அதிகாரங்களை உள்ளடக்கி, 13வது சீர்திருத்தத்தமானது முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டு மாகாணசபை தேர்தல் நடாத்தப்பட வேண்டும். மாகாணசபை முறைமை மூலம் தமிழ் மக்களுடைய உரிமைகள் பாதுக்காப்பட வேண்டும் என தென்னிலங்கையில் உள்ள சகோதரமொழி பேசும் இளைஞர் அமைப்பின் பிரதிநிதியான திரு.அர்ஜுன தெரிவித்துள்ளார். மாகாணசபை முறைமையை... Read more »

மாகாணசபை சபை முறைமை மூலம் பின்தங்கிய மக்களின் பிரச்சினைகளை தீர்க்க வழி வகுப்போம் – சந்திரசேகரன் தெரிவிப்பு!

தென் பகுதியில் இருந்து வருகை தந்த சகோதர மொழி பேசும் இளைஞர்களுக்கும் தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளர் சந்திரசேகரனுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று நேற்றையதினம் யாழ்ப்பாணம் – அரியாலையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் 13வது சீர்திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கான... Read more »

காலநிலை மாற்றங்களை எதிர்கொள்ளவும் மாவீரர்கள் நினைவாகவும் பண்பாட்டின் தொடர்ச்சியைப்பேணி ஆளுக்கொரு மரம் நடுவோம்…! பொ.ஐங்கரநேசன்

போரின் முற்றுகைக்குள்ளும் இயற்கை எனது நண்பன் என்று சொல்லி  சூழல் நல்லாட்சி ஆணையம், வனவளப் பாதுகாப்புப்பிரிவு என்பனவற்றை உருவாக்கி எமது சூழலைப் பேணிப் பாதுகாத்த தலைமைத்துவத்தைக் கொண்டிருந்தவர்கள் நாங்கள். மரங்களை ஆதித் தெய்வங்களாக வழிபட்ட நாம் இறந்தவர்கள் நினைவாக மரங்களை நாட்டும் தொல் மரபையும்... Read more »

வீதிகளை மட்டுமல்ல புதிய அரசு மக்களின் காணி நிலங்களை விடுவிப்பது அவசியம் – ஈ.பி.டி.பியின் ஊடக பேச்சாளர் சிறீரங்கேஸ்வரன்….!

உயர் பாதுகாப்பு வலயங்கள் என்ற போர்வைக்குள் இராணுவத்தினரது பாவனையில் இருந்துவரும் வீதிகளை மட்டுமல்ல மக்களின் எஞ்சிய காணி நிலங்களை  மக்களிடம் மீள வழங்கவதும் அவசியம் என ஈழ மக்கள் ஜனநாயக விடுவிப்பதும் அவசியம் என ஈ.பி.டி.பியின் உடக பேச்சாளர் ஐயாத்துரை சிறீரங்கேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார். யாழ்ப்பாணம்... Read more »

வாக்களர்களுக்கு விழிப்புணர்வூட்டுவதற்காக உத்தியோகத்தர்களுக்கு நடைபெற்ற செயலமர்வு!

பாராளுமன்றத் தேர்தலில் வாக்களிக்கும் முறை பற்றி உத்தியோகத்தர்களால் மக்களுக்கு தெளிவுபடுத்துவதற்கான செயலமர்வு யாழ்ப்பாண மாவட்ட  அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் (30.10.2024) மு.ப 10.30 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போா் கூடத்தில்   நடைபெற்றது. எதிர்வரும் நவம்பர் 14 ஆம்... Read more »

கொல்லப்பட்ட நிமலராஜனுக்கு நீதியை நிலைநாட்ட சர்வதேசத்திடம் கோரிக்கை…!

இலங்கை பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டில் இருந்த உயர் பாதுகாப்பு வலயத்தில் தமிழ் ஊடகவியலாளர் கொல்லப்பட்டு 24 வருடங்களாகியும் நீதி கிடைக்காத நிலையில் அவருக்கு நீதி கிடைக்க வேண்டுமென கோரியுள்ள வன்னி மண்ணின் ஊடகவியலாளர் அமைப்பு ஒன்று, அவருக்கு நீதி வழங்குவது மாத்திரம் போதுமானதல்ல என... Read more »

அமைச்சர்களாகும் ஆசையில் முன்னாள் தமிழ் எம்.பிகள், தேசிய மக்கள் சக்தி குற்றச்சாட்டு…!

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவை சந்தித்தபோது எடுத்த புகைப்படங்களை ஊடகங்களில் வெளியிடும் தமிழ் தலைவர்கள், எதிர்கால தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக்கொள்ளவுள்ளதாக மக்களுக்கு பொய்யான வாக்குறுதிகளை அளிப்பதாக அந்தக் கட்சியின் முக்கிய உறுப்பினர் ஒருவர் யாழ்ப்பாணத்தில் வைத்து சுட்டிக்காட்டியுள்ளார். யாழ்ப்பாணத்தில்... Read more »

களமுனையில் போராடி மண்ணிலே உறங்கும் ஒவ்வொரு இளைஞர்களின் கனவும் மக்களின் நிம்மதியும் சுதந்திரமும் மாத்திரமே.! வட்டுக்கோட்டையில்  வேந்தன்

களமுனையில் போராடி தாயக மண்ணிலே உறங்கும் ஒவ்வொரு இளைஞர்களின் கனவும் தாயக நிலப்பரப்பிலே மக்களின் நிம்மதியும் சுதந்திரமுமே என்று பரப்புரை கூட்டத்தில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் யாழ்ப்பாண மாவட்ட வேட்பாளரும் ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவருமான போராளி சி.வேந்தன் அவர்கள் கருத்துரைத்தார் ஜனநாயக... Read more »

தமிழரசுக்கட்சி ஆதரவாளர்களிடையே முரண்பாடு – ஒருவர் வைத்தியசாலையில்

தமிழரசுக்கட்சி ஆதரவாளர்களிடையே முரண்பாடு ஏற்பட்டதில் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கிளிநொச்சி அக்கராயன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கந்தபுரம் – மணியங்குளம் வீதியில் குறித்த சம்பவம் 2.10.2024 இரவு 8.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. குறித்த வீதியில் உள்ள தனியார் காணி ஒன்றுக்கு வீதியோர மண்ணை... Read more »