தமிழ் அரசியலுக்கு அவசியமானது கத்தியா? வித்தையா? சி.அ.யோதிலிங்கம்.

ரஸ்ய உக்ரைன் போர் இன்று இரண்டாவது வாரத்தைக் கடக்கத் தொடங்கியுள்ளது. 20 லட்சம் வரையான உக்ரைன் மக்கள் அகதிகளாக நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். உக்ரைன் நகரங்கள் ஒவ்வொன்றாக ரஸ்யாவிடம் விழுந்து கொண்டிருக்கின்றன. மிக மெதுவாக ஆனால் காத்திரமான வகையில் ரஸ்யா முன்னேறிக் கொண்டிருக்கின்றது.  அமைதிக்கான... Read more »

உக்ரைன் போர் தமிழ்த்தரப்பிற்கு பல வெளிகளைத் திறக்கும் சி.அ.யோதிலிங்கம்.

ஜெனிவா திருவிழா ஆரம்பித்து விட்டது.  ஐ.நா. மனித உரிமைகள் பேரவை உயர்ஸ்தானிகர் மிச்செல்பச்லெட்             அம்மையார் சற்று காட்டமான அறிக்கையை வெளியிட்டுள்ளார்.  தமிழ் மக்கள் பற்றிய விவகாரமாக ஆரம்பிக்கப்பட்ட ஜெனிவா திருவிழா இன்று இலங்கைத்தீவின் பொது விழாவாக... Read more »

சுதந்திரம்! தமிழ் மக்களை ஒடுக்குவதற்கான அனுமதிப்பத்திரம்…… சி.அ.யோதிலிங்கம்.

சிறீலங்காவின் 74 வது சுதந்திர தினம் கடந்த 4.02.2022  வெள்ளியன்று முப்படைகளின் அணிவகுப்புடன் சிங்கள தேசத்தில் அனுஸ்டிக்கப்பட்டது. சிங்கள தேசம் சுதந்திர தினத்தை மகிழ்ச்சியான தினமாக அனுஸ்டித்த போது தமிழ் மக்கள் கரி நாளாக அனுஸ்டித்தனர். இலங்கைத் தீவு சமூகமளவில் இரண்டாக இருப்பதை சுதந்திரதினம்... Read more »

பொறுப்புக்களை சுமந்துகொண்ட முன்னணி……./சி.அ.யோதிலிங்கம்.

13வது திருத்தத்திற்கு எதிரான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் போராட்டம் பலத்த அதிர்வலைகளை கிழப்பி விட்டிருக்கின்றது. ஒரு வகையில் தேங்கிப்போயிருந்த தமிழ் அரசியலை ஒரு சூடான நிலைக்கு கொண்டுவந்து விட்டிருக்கின்றது எனலாம். இரண்டு அரசியல் போக்குகள் தெளிவாகத் தெரியத் தொடங்கியுள்ளன. தமிழ் மக்கள் 60... Read more »

ஆங்கிலேயரிடமிருந்து ஆட்சியை கபடமாக சிங்களவர் கைப்பற்றிய குறியீட்டு நாளே பெப்ரவரி 4 -அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை….!

ஆங்கிலேயரிடமிருந்து ஆட்சியை கபடமாக இனவாத ஆட்சியாளர்கள் ஆட்சியை  கைப்பற்றிய குறியீட்டு நாளே பெப்ரவரி 4. என அனைத்துலக  ஈழத்தமிழர் மக்களவை அறிக்கை வெளியிட்டுள்ளது. அவர்கள் எமது இணையத்திற்கு அனுப்பிய செய்திக் குறிப்பிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் குறிப்பிட பட்ட மேலதிக விபரங்கள் வருமாறு. ஈழத்தமிழருக்கு... Read more »

தமிழர்களும் முஸ்லீம்களும் எதிர்காலத் தலைமுறை பற்றி சிந்திப்பது அவசியம். சி.அ.யோதிலிங்கம்.

தமிழ்த்தேசிய கட்சிகளும் மலையக முஸ்லீம் கட்சிகளும் இணைந்து இந்திய அரசிற்கு அனுப்பவிருந்த ஆவணம் முஸ்லீம் கட்சிகள் கையொப்பமிட தயங்குவதால் பின்நிலைக்குச் சென்றுள்ளது. 13வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தும் படி இந்தியாவைக் கோரவிருந்த ஆவணம் பின்னர் “இலங்கை இந்திய ஒப்பந்தமும் தமிழ் மக்களின் அபிலாசைகளும்” என... Read more »

இந்தியப்பிரதமருக்கான கடிதமும் தமிழ் மக்களும்…… சி.அ.யோதிலிங்கம்.

தமிழ்த்தேசியக் கட்சிகள் இந்தியப்பிரதமருக்கு அனுப்பப்பட என இருந்த கடிதம் இன்னமும் இந்தியத்தூதுவரிடம்  கையளிக்கப்படவில்லை. சம்பந்தன் நல்ல நாள் பார்த்து இந்தியத்தூதுவரிடம் கையளிக்க வேண்டும் என்பதற்காக தாமதப்படுத்தியிருந்தார். கடைசியில் கடந்த செவ்வாய் கையளிப்பதாக இருந்தது. தூதுவர் அவசரமாக டில்லி சென்றமையினால் கையளிக்கும் நிகழ்வு இடம்பெறவில்லை. இந்த... Read more »

தோல்வியடைந்த தளங்களில் ஏற முனையும் சம்பந்தன்….!சி.அ.யோதிலிங்கம்.

ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை தொடர்பாக தமிழ்த்தரப்பிலிருந்து பலத்த கண்டனக் குரல்கள் எழுந்துள்ளன.  இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பாக எதுவும் கூறவில்லை என்பதற்காகவே இவை எழுந்துள்ளன. சம்பந்தன் பலத்த ஏமாற்றமடைந்துள்ளதாக பசில்ராஜபக்சவிற்கு நேரடியாகவே கோபத்துடன் கூறியுள்ளார். “நீங்கள் உருப்பட மாட்டீர்கள்” எனவும் சாபம் போட்டிருக்கின்றார். சம்பந்தனுக்கு... Read more »

எழுகை நியூஸ் வாசக நெஞ்சங்கள் அனைவருக்கும் இனிய தைப் பொங்கல் நல் வாழ்த்துக்கள்…..!

எமது எழுகை நியூஸ் இணையத்தளத்தை தவறாது வாசித்துக் கொண்டிருக்கும் அனைவருக்கும் எமது தைப்பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம். கொடிய கொரோணா தொற்று நீங்கவும், அனைத்து துன்பங்களிலிருந்தும் விடுதலை பெற்று  அனைவரும் மகிழ்வான  வாழ்வை வாழ சூரிய பகவான் ஆசீர்வதிக்கட்டும்,           ... Read more »

மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் ஐயா படுகொலை சர்வதேசம் நீதிக்காக செயல்படவில்லை….!பா.அரியநேந்திரன்.

இலங்கை, மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர், மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முக்கிய உறுப்பினர்களின் ஒருவருமான யோசப் பரராஜசிங்கம் டிசம்பர் 25. 2005 அன்று 12:15 மணியளவில் மட்டக்களப்பு செயின்ற் மேரி தேவாலயத்தில் வைத்து அடையாளம் காணப்படாத ஒருவரால் சுட்டு கொல்லப்பட்டுள்ளார். இவர் இலங்கைத் தமிழரசுக்... Read more »