சுமந்திரன் வெளியேறினால் தான் அவர் செய்தவற்றை கடவுள் மன்னிப்பார்….!காணாமல் ஆக்கப்பட்ட அமைப்பு, வவுனியா.

நீங்கள் இப்பொழுது வெளியேறினால், நீங்கள் எங்களுக்கு செய்த தீங்குகளை கடவுள் மன்னிப்பார் என்று வவுனியா வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் அமைப்பு தெரிவித்துள்ளது. அவர்கள் மேலும் தெரிவித்ததாவது காணாமல் ஆக்கப்பட்டவர்களை கண்டுபிடிப்பதற்கான திறவுகோல் ரோம் சாசனத்தில்தான் உள்ளதே தவிர , OMPஇடத்தில் அல்ல என்று... Read more »

ஜனாதிபதியின் அறிவிப்பை கண்டிக்கும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் அமைப்பு…..!

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படும் என ஐ.நா மன்றில் சிறிலங்கா ஜனாதிபதி தெரிவித்த கூற்றை வன்மையாக கண்டிக்கிறோம் என வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் அமைப்பு ஊடக அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளனர். அதன் முழு வடிவமும் வருமாறு வடக்கு, கிழக்கு... Read more »

கழுதை தேய்ந்து கட்டெறும்பாகிய ஜெனிவா….! அரசியல் ஆய்வாளர் சி.அ.ஜோதிலிங்கம்.

ஜெனிவா ஆரவாரம் முடிவுக்கு வந்து விட்டது. இனி அடுத்த தொடரின் போது தான் ஆரவாரம் உருவாகும். பெரியளவிற்கு இல்லாவிட்டாலும் சுமாராக வரும் எனக் கருதப்பட்ட மனித உரிமைகள் பேரவை ஆணையாளின் அறிக்கை தமிழ் மக்களை கடும் அதிர்ப்திக்கு உள்ளாக்கியுள்ளது. சென்ற கூட்டத் தொடரில் ஆணையாளரினால்... Read more »

உள்ளாடைக்கும் தட்டுப்பாடா? ஆய்வாளர் நிலாந்தன்.

நாடு பொருளாதார ரீதியாக வங்குரோத்தாகி விட்டதா ?என்று இந்திய ஊடக நண்பர் ஒருவர் கேட்டார். நாட்டின் பொருளாதாரம் சரிந்துவிட்டது என்பது உண்மை.அமெரிக்க டொலரைக் காணமுடியவில்லை.ஆனால் நாங்கள் இன்னமும் பாணைச்  சீனியில் தொட்டு சாப்பிடும் ஒரு நிலைக்கு வரவில்லை என்று அவரிடம் சொன்னேன்.ஆனால் இன்னும் சில... Read more »

ஜெனிவா 48வது கூட்டத் தொடர் ஏமாற்றம்தான் எனினும் சோர்வடையத் தேவையில்லை…!சி.அ.யோதிலிங்கம்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 48 வது கூட்டத்தொடரில் மனித உரிமைகள் பேரவை ஆணையாளரின் வாய்மூல அறிக்கை காரமானதாக இருக்க மாட்டாது என்பது  எதிர்பார்க்கப்பட்ட ஒன்று தான். ஆனாலும் தமிழ் மக்களைப் பெரிதாகப் பாதிக்காதவகையில் சுமாராக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அந்த எதிர்பார்ப்பில் மண்... Read more »

ஜெனிவா விவகாரத்தில் கட்சி அரசியல் நடாத்தும் தமிழ்க் கட்சிகள்;

சி.அ.யோதிலிங்கம். ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 48வது கூட்டத் தொடர் எதிர்வரம் 13ம் திகதி ஆரம்பமாகவிருக்கின்றது. அதில் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் இலங்கை தொடர்பாக வாய்மூல அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளார். இதற்கு பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் கருத்துக்களைக் கூறலாம். ஆணையாளர் அவற்றையெல்லாம் செவிமடுத்தே வாய்மூல அறிக்கையைத்... Read more »

இலங்கை தொடர்பில் ஐ.நா. விசேட அறிக்கையாளரின் அறிக்கை –

இலங்கையில் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை சர்வதேச மனித உரிமைகள் தரத்திற்கு ஏற்ப கொண்டு வர மீளாய்வு செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது. நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகளின் சுதந்திரம் குறித்த விசேட அறிக்கையாளர், கருத்து மற்றும் கருத்து சுதந்திரம் மேம்படுத்துதல் மற்றும் பாதுகாப்பது குறித்த விசேட அறிக்கையாளர், சிறுபான்மையினர்... Read more »

வக்சினே சரணம்……! ஆய்வாளர் நிலாந்தன்.

“அரசாங்கத்தின் நிர்வாகத் திறமையின்மையே கொரோனா வைரஸ் நிலைமை மோசமடைவதற்கு காரணம்.கொரோனாவிற்கு எதிரான போராட்டத்திற்கு மருத்துவ நிபுணர்கள் தலைமை தாங்கவேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரான எரான் விக்கிரமரட்ண.எனது கடந்த வாரக்கட்டுரையில் நான் குவிமையப்படுத்திய விடயமும் இதுதான்.“இலங்கை ஒரு சிறியதீவு... Read more »

நியுஸிலாந்தில் சுட்டுக்கொல்லப்பட்ட இலங்கையர் குறித்து CID விசாரணை!

நியுஸிலாந்தின் ஓன்லேன்ட நகரில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் தாக்குதல் மேற்கொண்ட இலங்கையர் தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினர் விஷேட விசாரணை ஒன்றை ஆரம்பித்துள்ளனர். குறித்த நபருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த நபர்களிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. ஐஎஸ் ஐஎஸ் அமைப்புடன் தொடர்பில் இருந்த... Read more »

தமிழரசுக் கட்சியின் தலைமை மீது சுரேஸ் குற்றச்சாட்டு!

தமிழ் மக்கள் விடயத்தில் தமிழரசுக் கட்சியின் தலைமைத்துவம் இரட்டை வேடமிட்டு செயற்படுகின்றது என ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இனப்பிரச்சினை தொடர்பாக ஜெனிவாவில் வாய்மூல அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இன்று அவரது இல்லத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்... Read more »