காட்டு யானைகளின் அட்டகாசத்தினால் மக்களின் வாழ்வாதாரங்களுக்கு பாதிப்பு

காட்டு யானைகளின் அட்டகாசத்தினால் மக்களின் வாழ்வாதாரங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கிளிநொச்சி – கண்டவளை பகுதியில் இவ்வாறு காட்டு யானைகளின் அட்டகாசத்தினால் மக்களின் வாழ்வாதாரங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வெளிக்கண்டல் பகுதியில் நேற்றைய தினம் 21.03.2024 இரவு மக்கள் குடியிருப்புகள் புகுந்த... Read more »

யாழில் இடம்பெற்ற கொள்ளை சம்பவம்

வைத்தியசாலையில் கடமை முடித்து மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டிருந்த ஊழியரை சிறுப்பிட்டி பகுதியில் மோட்டார் சைக்கிளில் வாள்களுடன் வந்த இரு இளைஞர்கள் அவரை மறித்து அவர் அணிந்திருந்த சங்கிலி மற்றும் மோதிரம் என்பவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இச்சம்பவம் நேற்றைய தினம் அதிகாலை 1.30 மணியளவில்... Read more »

இலங்கை வங்கி வாடிக்கையாளர்களுக்கு விடுத்த அவசர எச்சரிக்கை..!

நாட்டில் இடம்பெறும் இணைய பணபரிமாற்ற மோசடி தொடர்பில் இலங்கை வங்கி தமது வாடிக்கையாளர்களுக்கு விசேட அறிவித்தலொன்றை வழங்கியுள்ளது. அதன்படி வாடிக்கையாளர்களின் கார்ட் அல்லது கணக்கு அல்லது OTP விபரங்களை கேட்டு, பொதிகள் சேவையாக இயங்கும் இணையத்திலிருந்து போலியான குறுஞ்செய்தி வருவதாக தனது எச்சரிக்கை செய்தியில்... Read more »

கோப் குழுவிலிருந்து பதவி விலகப் போவதில்லை! ரோஹித்த

கோப் குழுவின் தலைமைப் பதவியிலிருந்து விலகப் போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். அரசாங்கம் அண்மையில் கோப் குழுவின் தலைவராக ரோஹித அபேகுணவர்தனவை நியமித்தது. இந்த நியமனத்திற்கு எதிர்ப்பை வெளியிட்டு குழுவின் உறுப்பினர்கள் பலர் பதவி விலகியுள்ளனர். இவ்வாறான ஓர் பின்னணியிலும்... Read more »

ஆசிரியர் வெற்றிடங்களுக்கு பட்டதாரிகளை இணைத்துக் கொள்ள நடவடிக்கை…!

தென் மாகாணத்தில் உள்ள 3100 ஆசிரியர் வெற்றிடங்களுக்கு பட்டதாரிகளை இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என தென் மாகாண ஆளுநர் வில்லி கமகே தெரிவித்துள்ளார். சமீபத்தில் நடந்த ஆசிரியர் தேர்வு முடிவுகளின் அடிப்படையில், விரைவில் நேர்காணல் நடத்தப்பட்டு, அடுத்த மாதம் ஆட்சேர்ப்பு நடத்தப்படும். அதேவேளை, பிரதேச செயலக... Read more »

கனடாவை சென்றடைந்த அநுரவிற்கு விமான நிலையத்தில் அமோக வரவேற்பு…!

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க நேற்றையதினம்(21) கனடாவுக்கு விஜயம் செய்தார். நாளை மற்றும் நாளைமறுதினம் (23, 24)  கனடாவின் ரொறொன்ரோ மற்றும் வான்கூவரில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டங்கள் மற்றும் பல சிநேகபூர்வ சந்திப்புகளில் பங்கேற்பதற்காகவே அநுர கனடா சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கனடாவிற்கு... Read more »

வாகன விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த 12 வயது மாணவன்..!

கெக்கிராவ, கனேவல்பொல வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 12 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கெக்கிராவ நெல்லியாகம பகுதியைச் சேர்ந்த 6 ஆம் ஆண்டில் கல்வி கற்கும் குசல யுகத் சஞ்சீவ என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். விபத்தில்... Read more »

சிவராத்திரியை பகலில் நடத்துமாறு கூறும் பொலிஸ்; பொசன் பண்டிகையை பகலில் கொண்டாட முடியுமா? – சார்ள்ஸ் எம்.பி.

இந்துக்களின் சிவராத்திரியை பகலில் நடத்துமாறு பொலிஸார்  கூறுவதை போன்று பௌத்தர்களின் பொசன் தின நிகழ்வை பகலில் நடத்துமாறு பொலிஸாரினால் கூற முடியுமா என  தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்  சார்ள்ஸ் நிர்மலநாதன் சபையில் கேள்வியெழுப்பினார். பாராளுமன்றத்தில்  நேற்று   உரையாற்றும் போது மேற்கண்டவாறு அவர்... Read more »

போராட்டக்காரர்களின் உடலில் நீர் சத்து குறைகிறது – வைத்தியர் எச்சரிக்கை

இந்திய மீனவர்களின் அத்துமிறலைக் கண்டித்து உணவு தவிப்பு போராட்டத்தில் ஈடுபடும் நான்கு பேரின் உடலில் நீரின் அளவு குறைவடைந்து செல்வதாக பரிசோதித்த வைத்தியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். யாழ்ப்பாண குடாப்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்களை நிறுத்துமாறு கோரி கடந்த செவ்வாய்க்கிழமை நான்கு மீனவர்கள்... Read more »

பண்டிகை காலத்தை முன்னிட்டு அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு..! தட்டுப்பாடின்றி வழங்கவும் நடவடிக்கை

எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் மக்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களை தட்டுப்பாடின்றி வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கால்நடை வளங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் டீ.பி ஹேரத் தெரிவித்துள்ளார். அத்துடன், பண்டிகைக் காலத்தில் நுகர்வோருக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களை நியாயமான விலையில் வழங்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர்... Read more »