வீழ்ச்சியடைந்தது அமெரிக்க டொலரின் பெறுமதி..!!

அமெரிக்கா டொலர் ஒன்றின்  பெறுமதி இன்றைய  தின வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 301 ரூபாய் 76 சதம் விற்பனை பெறுமதி 311 ரூபாய் 00... Read more »

புதுக்குடியிருப்பில் விஷேட சோதனை நடவடிக்கை..!!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் பொலிஸார் மற்றும் விஷேட அதிரடி படையினர் இணைந்து விஷேட சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். நாட்டில் போதைப்பொருள் மற்றும் பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்காக பொலிஸாரால் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் விசேட நடவடிக்கையான ‘யுக்திய’வின் ஒரு பகுதியாகவே புதுக்குடியிருப்பு பிரதேசத்தில்... Read more »

வேகக் கட்டுப்பாட்டை இழந்து பண்ணை கடலினுள் பாய்ந்தது பொலிஸாரின் முச்சக்கர வண்டி!

இன்றையதினம் கோப்பாய் பொலிஸாரின் முச்சக்கர வண்டி வேகக் கட்டுப்பாட்டை இழந்து பண்ணை கடலினுள் பாய்ந்தது. விசாரணைக்காக சென்ற முச்சக்கர வண்டியே இவ்வாறு விபத்துக்குள்ளானது. இவ்வாறு கடலினுள் பாய்ந்த முச்சக்கரவண்டியானது உழவு இயந்திரத்தின் உதவியுடன் மீட்கப்பட்டது. பொலிஸாரே இவ்வாறு அதிக வேகத்தில், ஆபத்தான விதத்தில் பயணம்... Read more »

கொழும்பில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது.

ஒருகொடவத்தை, சேதவத்தை பகுதியில் இருந்து இந்தச் சடலம் மீட்கப்பட்டது. இன்று அதிகாலை 3 மணியளவில் அந்தப் பகுதியில் சடலம் ஒன்று காணப்படுகின்றது என்று பொலிஸாருக்குத் தகவல் கிடைத்தது. அதையடுத்துப் பொலிஸார் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை மீட்டனர். சடலத்தின் தலையில் அடிகாயங்கள் இருப்பதால் மேற்படி... Read more »

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை ஏமாற்றும் ஓ.எம்.பி அதிகாரிகள்…!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை ஏமாற்றி  பொய்களை கூறி அவர்களை காணாமல் போனவர்களிற்கான அலுவலகத்திற்கு அழைத்து பதிவுகளை மேற்கொள்ளும் செயற்பாடு தற்போது இடம்பெற்று வருவதாக வவுனியா மாவட்ட வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் தலைவி சிவானந்தன் ஜெனிற்றா தெரிவித்துள்ளார். வவுனியா மாவட்ட வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின்... Read more »

தெற்காசியாவுக்கான நுழைவாயிலாக கொழும்பு துறைமுக நகரம்!

கொழும்பு துறைமுக நகரம் தெற்காசியாவுக்கான நுழைவாயிலாக திகழும் என்பதில் ஐயமில்லை என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பு துறைமுக நகர வர்த்தக மையத்தின் நிர்மாணப் பணிகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு  நேற்றைய தினம் இடம்பெற்றிருந்தது. இதில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர்... Read more »

வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் பொதுச்சபை கூட்டம்

வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் பொதுச்சபை கூட்டம் வவுனியா நகரசபை மண்டபத்தில் இன்று(13)  இடம்பெற்றது. இதன்போது சங்கத்திற்க்கான புதிய நிர்வாகத் தெரிவு இடம்பெற்றது. அந்தவகையில் புதிய தலைவியாக சிவானந்தன் ஜெனிற்றா தெரிவுசெய்யப்பட்டதுடன் செயலாளராக துரைசிங்கம் கலாவதியும் பொருளாளராக சர்வேஸ்வரன் கலாராணியும், உபதலைவராக பேரின்பராசா... Read more »

கணவரின் சாவுக்கு கடற்படையும் ஒரு காரணம்

கணவரின் சாவுக்கு கடற்படையும் ஒரு காரணம் என வட்டுக்கோட்டையில் கொலை செய்யப்பட்ட குடும்பஸ்தரின் மனைவி  கொலை தொடர்பில் மனைவி வாக்குமூலம் அளித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த 23 வயதான குடும்பஸ்தர் ஒருவர் தனது மனைவியுடன் காரைநகர் பகுதிக்கு நேற்றுமுன்தினம்(11)... Read more »

இலங்கையில் அதிகரிக்கும் இணைய மோசடி

இலங்கையில் இணைய மோசடிச் சம்பவங்களில் குறிப்பிடத்தக்களவு அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக இலங்கை கணனி அவசர பதிலளிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. இணைய வழியில் தொழில் வாய்ப்பு வழங்குதல், கிறிப்டொ கரன்ஸி, பிரமிட் போன்ற மோசடிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அந்த அமைப்பின் சிரேஸ்ட தகவல் தொழில்நுட்ப பாதுகாப்பு பொறியிலாளர்... Read more »

சதி மூலம் ஆட்சிக்கு வந்ததை கோட்டாவின் நூல் மறந்து விட்டதா – வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் கேள்வி

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அவர்கள் எழுதிய நூல் குறித்து வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் அவர்கள் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, அண்மையில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய வெளியிட்ட நூலில் தன்னை ஆட்சியில் இருந்து... Read more »