பேலியகொட பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறிகளின் விலைகள் இன்று(9) குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி , ஒரு கிலோ முள்ளங்கி 50 ரூபாவாகவும் , ஒரு கிலோ கரட் 200 ரூபாவாகவும், ஒரு கிலோ பூசணிக்காய் 250 ரூபாவாகவும் குறைவடைந்துள்ளது. மேலும் , ஒரு கிலோ... Read more »
யாழ். குடாநாட்டில் படையினர் வசமுள்ள 68.57 ஏக்கர் நிலங்கள் நாளை(10) விடுவிக்கப்படவுள்ளதாக யாழ் மாவட்ட செயலகம் அறிவித்துள்ளது. குடாநாட்டில் தற்போது படையினர் வசமுள்ள 3 ஆயிரத்து 412 ஏக்கரில் இருந்து 68.57 ஏக்கர் விடுவிக்கப்படுகின்றது. இதற்கான நிகழ்வு நாளை(10) யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெறவுள்ளது. இவ்வாறு விடுவிக்கப்படும்... Read more »
வடக்கு மாகாண பிரதம செயலாளராக தற்போதைய ஜனாதிபதி செயலகத்தின் மேலதிக செயலாளர் எல்.இளங்கோவன் எதிர்வரும் 15ஆம் திகதி நியமிக்கப்படவுள்ளார். வடக்கு மாகாணத்தில் ஆளுநரின் செயலாளராகவும், கல்வி அமைச்சின் செயலாளராகவும் அவர் பணியாற்றியிருந்தார். நீண்ட காலம் தொடர்ச்சியாக வடக்கில் பணியாற்றிய அவர், பின்னர் கொழும்புக்கு விடுவிக்கப்பட்டிருந்தார்.... Read more »
ஏழை மக்களின் சாபமே கோட்டபாய ராஜபக்சவை ஜனாதிபதியாக இருக்க விடவில்லை என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார். கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவரின் அலுவலகத்தில் நேற்றையதினம் (8) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,... Read more »
வெடுக்குநாறிமலை ஆதி சிவன் கோவிலில் சிவராத்திரி வழிபாட்டில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட அடக்குமுறைகள் தமிழர்களின் கையில் மீண்டும் ஆயுதம் திணிக்க முற்படும் செயலா? என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் கேள்வி... Read more »
வடக்கின் பெரும் சமர் என வர்ணிக்கப்படும் யாழ் சென்.ஜோன்ஸ் கல்லூரிக்கும் யாழ் மத்திய கல்லூரிக்கும் இடையிலான மாபெரும் கிரிக்கெட் போட்டியில் யாழ் சென்.ஜோன்ஸ் கல்லூரி 10 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது. வடக்கின் பெரும் சமர் என வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரிக்கும் யாழ்ப்பாணம் மத்திய... Read more »
மகா சிவராத்திரியை ஒட்டி நாடு முழுவதும் இந்து சமயப் பண்டிகைகள் கொண்டாடப்பட்டன. யாழ்ப்பாணம், தென்மராட்சி, வடமராட்சி ஆகிய பகுதிகளை உள்ளடக்கி, அதிகளவான பக்தர்கள் கலந்து கொண்ட சமய வைபவம் பருத்தித்துறை பிரதேசத்தில் உள்ள பசுபதீஸ்வரர் சிவன் கோவிலில் இடம்பெற்றது. பருத்தித்துறை பசுபதீஸ்வரர் சிவன் கோவிலில்... Read more »
இந்திய கிரிக்கெட் வீரரும், ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் நட்சத்திர வீரருமான தினேஷ் கார்த்திக் நடப்பு ஐ.பி.எல்(IPL) தொடருடன் IPL மற்றும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறப்போவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2008 ஆம் ஆண்டிலிருந்து தினேஷ் கார்த்திக் அனைத்து ஐ.பி.எல்(IPL) தொடர்களிலும்... Read more »
வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் சிவராத்திரி தின இரவு நிகழ்வுகளுக்காக கூடியிருந்த பக்தர்கள் மீது பொலிஸார் வன்முறையில் ஈடுபட்டுள்ளதுடன் வழிபாடுகளையும் குழப்பி சமய குருக்களால் சபிக்கப்பட்டுள்ளனர். வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் வழமை போன்று சிவராத்திரி வழிபாடுகளை மேற்கொள்ள பக்தர்கள் சென்றிருந்தனர். நீதிமன்ற அனுமதியுடன் வழிபாடுகளை மேற்கொள்ளச்... Read more »
இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அனுராதபுரம் – ரம்பேவ பகுதியில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. அதாவது கெப் ரக வாகனமொன்று வீதியில் சென்ற பாதசாரிகள் குழு மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. விபத்தில் மூன்று... Read more »