நள்ளிரவில் நடமாடும் மர்ம நபர்கள்…!

மஸ்கெலியா பிரதான வீதியில் உள்ள மரக்கறி விற்பனை நிலையம் ஒன்றிலும் பேருந்து தரிப்பிட வீதியிலுள்ள இரண்டு வர்த்தக நிலையங்களின் பூட்டு உடைக்கப்பட்டு பணம் சூறையாடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று(01)  நள்ளிரவில்  இடம்பெற்றுள்ளது. மேலும்,  இது குறித்து சம்பந்தப்பட்ட வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள் மஸ்கெலியா பொலிஸ்... Read more »

வடமாகாண சட்டத்தரணிகளுக்கான சட்ட மாநாடும், தொழில்வான்மை விருத்தி தொடர்பாக கருத்தரங்கும்

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் வடமாகாண சட்டத்தரணிகளுக்கான சட்ட மாநாடும், தொழில் வான்மை விருத்தி தொடர்பான கருத்தரங்கும் இன்று யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் சிரேஸ்ட சட்டத்தரணி த.தவராசா தலைமையில் நடைபெற்றது. இவ் கருத்தரங்கு மாநாட்டுக்கு பிரதம அதிதியாக இலங்கை உயர்நீதிமன்ற நீதியரசர்... Read more »

நாகர்கோவில் மகாவித்தியாலய இல்ல மெய்வல்லுநர் போட்டி

வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் மகாவித்தியாலய வருடாந்திர இல்லமெய்வல்லுநர் திறனாய்வு போட்டி நேற்று வெள்ளிக்கிழமை 01.03.2024 பி.ப.01.45 மணியளவில் பாடசாலை மைதானத்தில் ஆரம்பமானது. பாடசாலை முதல்வர் கு.கண்ணதாசன் தலைமையில் ஆரம்பமான குறித்த நிகழ்வில் மருதங்கேணி கோட்டக்கல்வி பணிப்பாளர் சி.இராமச்சந்திரன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டதோடு சிறப்பு... Read more »

வெடுக்குநாறி மலையில் மீண்டும் சிக்கல்…! சிவராத்திரி வழிபாட்டை குழப்ப சூழ்ச்சி…!

வவுனியா வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் எதிர்வரும் சிவராத்திரி தினத்தில் முன்னெடுக்கப்படவுள்ள வழிபாட்டை குழப்புவதற்கு பௌத்த பீடம் ஒன்றின் பிக்குமார்களால் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் தவபாலன் குற்றம் சுமத்தியுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, எதிர்வரும்... Read more »

யாழ் பல்கலையில் பறக்கும் கருப்புக் கொடிகள்…!

சாந்தனின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக யாழ் பல்கலைக் கழக வளாகமெங்கும்  இன்றையதினம்(02) கறுப்பு கொடிகள் பறக்க விடப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி 33 வருடங்கள் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட ஈழத்தமிழர் சாந்தன்,... Read more »

வெளிநாட்டு கடன்களை செலுத்தாவிட்டால் இலங்கைக்கு சிக்கல்…!

வெளிநாட்டில் இருந்து பெற்ற கடன்களை உறுதி வழங்கியதன்படி செலுத்தாவிட்டால் இலங்கையை முன்னெடுத்துச் செல்லமுடியாது என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். வீதி திட்டமொன்றை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அதேவேளை, அரசாங்கத்தை பராமரிப்பதற்கும்... Read more »

தமிழருக்கு நீதி கிடைக்காது என்பவர்கள் தமக்கு நீதி கிடைக்க நீதிமன்றங்களை நாடுவது வேடிக்கையானது…! அமைச்சர் டக்ளஸ்

இலங்கை நீதிமன்றங்களில் தமிழருக்கு நீதி கிடைக்காது என்பவர்கள் தமக்கு நீதி கிடைக்க நீதிமன்றங்களை நாடுவது வேடிக்கையானது என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை அரசு தமிழருக்கு நீதியும் வழங்காது தீர்வும் தராது என்றவர்கள், இலங்கை... Read more »

யாழ் மக்களை திரும்பி பார்க்க வைத்த வெளிநாட்டவர்கள்…!

யாழ். மானிப்பாய் வைத்தியசாலையின் வளர்ச்சிக்காக வெளிநாட்டவர்களால் துவிச்சக்கரவண்டி பயணம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து வருகை தந்த 30 இற்கும் மேற்பட்டோர்,  துவிச்சக்கர வண்டிப் பயணம் மூலம் நிதி சேகரித்து அதனை யாழ். மானிப்பாய் பகுதியில் உள்ள வைத்தியசாலைக்கு... Read more »

சாந்தனின் இறுதிக் கிரியைகள் தொடர்பில் வெளியான தகவல்

சாந்தனின் உடல் நேற்றையதினம்(01)  இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட நிலையில்  சாந்தனின் இறுதிக்கிரியைகள் நாளை(03) இடம்பெறவுள்ளதாக நேற்றையதினம் செய்திகள் வெளியாகியிருந்த நிலையில்  இறுதிக் கிரியை இடம்பெறுவது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என அவரது சகோதரர் மதிசுதா தெரிவித்துள்ளார். அவரது பூதவுடலுக்கு மீள் உடற் கூற்றுப் பரிசோதனை செய்யப்... Read more »

இளைஞர் மன்ற தலைமைத்துவ உச்சி மாநாடு 04 ஆம் திகதி

இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தினால் ஏற்பாடு செய்யப்படும் இளைஞர் மன்ற தலைமைத்துவ உச்சி மாநாடு எதிர்வரும் 04ஆம் திகதி முதல் 07ஆம் திகதிவரை கொழும்பில் நடைபெறவுள்ளது. இலங்கையில் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் இந்த மாநாட்டில் பல்வேறு பின்னணிகளைக் கொண்ட 100 க்கும் மேற்பட்ட இளம் தலைவர்கள் ஒன்றுகூடவுள்ளனர்.... Read more »