கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் பெண்ணொருவரின் சடலம் மீட்பு

மீகஸ்பிட்டிய, உரகஸ்மன்ஹந்தியவில் உள்ள ஸ்டிக்கர் கடை ஒன்றில் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் பெண்ணொருவரின் சடலம் இன்று (11) காலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக  உரகஸ்மன்ஹந்திய பொலிஸார் தெரிவித்தனர். குறித்த கடையின் உரிமையாளரின் மனைவியான 41 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குடும்ப தகராறு காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாகவும், சம்பவம்... Read more »

மியன்மாரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 8 இலங்கையர்கள் மீட்பு..!

மியன்மாரில் பயங்கரவாதிகளின் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்ட 8 இலங்கையர்களும் தாய்லாந்தில் உள்ள இலங்கை தூதுவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். எதிர்வரும் சில தினங்களில் அவர்கள் இலங்கைக்கு அழைத்து வரப்படவுள்ளதாக மியன்மாருக்கான இலங்கை தூதுவர் ஜனக பண்டார தெரிவித்துள்ளார். அத்துடன், மியான்மரில் தாய்லாந்து எல்லையில் ஆயுதம் ஏந்திய குழுவினால்... Read more »

வர்த்தக அமைச்சரின் எச்சரிக்கை

முட்டையின் விலை அதிகரிக்கப்பட்டால் மீண்டும் இந்தியாவில் இருந்து முட்டைகளை இறக்குமதி செய்யவுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். ஆனால், கடந்த சில நாட்களாக சற்று விலை குறைந்து வந்த உள்ளூர் முட்டை விலை தற்போது 50 ரூபாவாக அதிகரித்துள்ளது. பண்டிகைக் காலத்தில் தேவை... Read more »

மன்னாரில் நீண்ட நாட்களின் பின்னர் இன்றைய தினம் கடுமையான மழை வீழ்ச்சி

மன்னாரில் நீண்ட நாட்களின் பின்னர் இன்றைய தினம் கடுமையான மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக தொடர்ச்சியாக நிலவி வந்த அதி உஷ்ணமான காலநிலை காரணமாக அதிகளவான வெப்பம் மற்றும் வறட்சி மன்னார் மாவட்டத்தில் நிலவி... Read more »

யாழ்ப்பாணத்தின் பிரபல மிருதங்க வித்துவான்  இயற்கை எய்தினார்!

பிரபல மிருதங்க வித்துவான் பிரம்மஸ்ரீ சு.வரதராஜசர்மா நேற்று10)  தெல்லிப்பழையில் இறைவனடி சேர்ந்தார். தெல்லிப்பழையை பிறப்பிடமாகக் கொண்ட இவர் ,1955ம் ஆண்டு மே மாதம் 02 ம் திகதி பிறந்தார்.  இவர் மிருதங்க வித்துவானாக பல்வேறு கலை சார் பணிகளை முன்னெடுத்திருந்தார். குறிப்பாக யுத்த காலம்... Read more »

இலங்கையில் சட்டவிரோதமாக பயன்படுத்தப்படும் கண்ணீர்ப்புகை, நீர்த்தாரை பிரயோகங்கள்!

இலங்கையில் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகங்களை சட்டவிரோதமாக பயன்படுத்துவதாக சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது. இலங்கை சட்ட அமுலாக்க அதிகாரிகள், எந்த எதிர்ப்பையும் தடுக்க செயற்படுவதாக அந்தச் சபை முன்னெடுத்த ஆய்வில் தெரியவந்துள்ளது. 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் கடந்த ஆண்டு ஜூன்... Read more »

பெண் அரச உத்தியோகத்தரை அச்சுறுத்திய இராஜாங்க அமைச்சர்..!

அமைச்சு அதிகாரிகள் முன்னிலையில் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசாநாயக்க, அரச உத்தியோகத்தர் ஒருவரை அச்சுறுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. லங்கா பொஸ்பேட் நிறுவனத்தின் மனித வள மற்றும் நிர்வாக உதவியாளரான வீ.சே.சந்திரரட்ன என்ற பெண் உத்தியோகத்தர் இவ்வாறு அச்சுறுத்தப்பட்டதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம்... Read more »

யாழில் பாடசாலை அபிவிருத்திக்கென வாட மனித உரிமைகள் ஆணைக்குழு அதிரடி நடவடிக்கை…!

யாழ் மாவட்ட பாடசாலை ஒன்றில் பாடசாலை அபிவிருத்திக்கென வாட்ஸ்அப்  குழு மூலம் தொடர்ச்சியாக நிதி சேகரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கவனம் செலுத்தியுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ். வடமராட்சி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலை ஒன்றில் பாடசாலை அபிவிருத்திக்கு... Read more »

பொலிஸாரின் தாக்குதலில் விரையை இழந்த இளைஞன்..

மதவாச்சி – விரால்முறிப்பு பகுதியில் போக்குவரத்து பொலிஸாரால் தாக்கப்பட்ட இளைஞன் ஒருவரின் விரைகள் சத்திரசிகிச்சையின் மூலம் அகற்றப்பட்டதாக தாக்குதலுக்கு உள்ளான இளைஞனின் தாயார் குறிப்பிட்டுள்ளார். எனினும் இளைஞன் தாக்கப்படவில்லை என்றும், அவரைக் கைது செய்யச் சென்றபோது அவர் ஆக்ரோஷமாகச் செயல்பட்டதாகவும் பொலிஸார் கூறுகின்றனர். சம்பவம்... Read more »

நாடாளுமன்ற உறுப்பினர்கள் விடுத்துள்ள கோரிக்கை

தமது குடும்ப உறுப்பினர்களுக்கும் காப்புறுதித் தொகையை வழங்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் நாடாளுமன்றத் தலைவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தற்போது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மட்டும் காப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டு வந்த நிலையில், ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் காப்பீட்டுத் தொகையின் மதிப்பு பத்து... Read more »