பல இலட்சம் பெறுமதியான பொருட்களுடன் கட்டுநாயக்கவில் இரு வர்த்தகர்கள் கைது..!

நாட்டிற்குள் சுங்க வரி செலுத்தாமல் சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்ட 50 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்களுடன் இரு வர்த்தகர்கள் கட்டுநாயக்க விமான நிலைய குற்றப்புலனாய்வு பிரிவினரால் இன்று (8) கைது செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை கைதுசெய்யப்பட்டவர்கள் ஜா – எல, இரத்தினபுரி ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 58... Read more »

பதவி பறிபோகும் நிலையில் 83 நாடாளுமன்ற உறுப்பினர்கள்..!

மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் பல்வேறு பணிகளில் ஈடுபட்டுள்ள சில நாடாளுமன்ற உறுப்பினர்கள், தங்களின் பதவியை இழக்க நேரிடும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது. ஜனவரி மாதத்தில் 83 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒரு நாள் கூட நாடாளுமன்றக் கூட்டங்களில் பங்கேற்கவில்லை என... Read more »

பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் விமானப்படை வீரர் மரணம்..!

பாதுக்கை –  அங்கமுவ பிரதேசத்தில் நேற்றிரவு பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளார். பொலிஸ் விசேட அதிரடிப் படையினரும் பொலிஸாரும் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையின் போது, ​​ பொலிஸ் வீதித் தடைக்கு அருகில், உத்தரவை மீறி மோட்டார் சைக்கிள் ஒன்று சென்றதுடன் அதனை செலுத்தியவர்... Read more »

இலங்கையில் நீரில் மூழ்கி இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு..!

நீரில் மூழ்கி நாளாந்தம் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றா நோய் பிரிவு தெரிவித்துள்ளது ஒவ்வொரு வருடமும் நீரில் மூழ்கி சுமார் 800 பேர் உயிரிழப்பதாக சுகாதார அமைச்சின் தொற்றா நோய் பிரிவின் விபத்து தடுப்பு மற்றும் முகாமைத்துவ பிரிவின் தலைவர் சமூக... Read more »

கொழும்பில் மர்மமான முறையில் உயிரிழந்த பெண் குழந்தை..!

கொழும்பு – மாளிகாவத்தை பகுதியில் ஒப்பந்தத்தின் மூலம் நெருங்கிய உறவினருக்கு வழங்கப்பட்ட 4 வயது 7 மாத பெண் குழந்தையொன்று சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். ஒப்பந்தத்தின் மூலம் நான்கு வயது குழந்தையை வேறு தரப்பினருக்கு வழங்க ஏற்பாடு செய்தமை தொடர்பில் குழந்தையின்... Read more »

சஜித்துடன் இணைந்தவர்கள் குறித்து நாளை தீர்மானம்..! மொட்டு கட்சி அறிவிப்பு

சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து கொண்ட உறுப்பினர்கள் தொடர்பில் நாளை தீர்மானிக்கப்பட உள்ளதாக ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி அறிவித்துள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இணைந்து உருவாக்கும் ஐக்கிய மக்கள் சக்தி கூட்டமைப்பில் அண்மையில் சில பொதுஜன முன்னணி... Read more »

ஓய்வுபெற்ற படைவீரர்கள் தொடர்பில் அரசாங்கம் நடைமுறைப்படுத்தவுள்ள திட்டம்..!

ஓய்வுபெற்ற போர் வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் நலனுக்கான திட்டங்களை நடைமுறைப்படுத்த அரசாங்கம் தயாராக உள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார். சேவையில் இருந்து ஓய்வுபெற்ற மற்றும் மருத்துவ காரணங்களுக்காக ஓய்வுபெற்ற படைவீரர்கள் மற்றும் அவர்களின் உறவினர்கள் பங்குபற்றும் நிகழ்வொன்று... Read more »

பண்டிகைக் காலங்களில் இனிப்பு பொருட்களை கொள்வனவு செய்வோருக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

பண்டிகைக் காலங்களில் இறக்குமதி செய்யப்படும் சொக்லேட் உள்ளிட்ட இனிப்பு வகைகளை கொள்வனவு செய்யும் போது மிகவும் அவதானமாக இருக்குமாறு நுகர்வோர் அதிகார சபை மக்களுக்கு அறிவித்துள்ளது. வெளிநாடுகளிலிருந்து, காலாவதியான இனிப்புகளை  இறக்குமதி செய்து திகதிகளை மாற்றி விற்பனை செய்ய முயன்றவர்களுக்கு நுகர்வோர் அதிகார சபை... Read more »

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து தமிழ் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருகோணமலையைச் சேர்ந்த 27 வயதுடைய ஒருவரே விமான நிலைய குடிவரவு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். போலியான ஆவணங்கள் மூலம் இத்தாலி செல்ல முற்பட்ட வேளையில் குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டதாக குடிவரவு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறித்த இளைஞனின் ஆவணங்கள் பரிசோதனை செய்த... Read more »

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கண்டனம்!

கிளநொச்சி பூநகரி பிரதேச செயலகத்திற்குட்பட்ட பொன்னாவெளி கிராமத்தில் சுண்ணக்கல் அகழ்வு க்காக கடந்த (05)திகதி சென்றிருந்த போது கிராம மக்களால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டார். இதில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் எதிர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்ட மக்களை தாக்கியும் உள்ளார். இதுதொடர்பாக... Read more »