தமிழ் இனப்படுகொலையை அங்கீகரிக்க கோரி பிரித்தானிய பிரதமருக்கு இருவேறு மனுக்கள்!

இலங்கையில்  நடந்த ஈழத்தமிழ் மக்களுக்கு எதிரான இனப்படுகொலையின் உச்சமான மே 18 அவலத்தின் 15 ஆவது ஆண்டு நினைவு நிகழ்வுகளின் போது, பிரித்தானிய பிரதமரிடன் இரு அமைப்புக்களால் இருவேறு மகஜர்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. முதல் மனுவானது,  இலங்கை அரசாங்கத்தால் தமிழ் மக்களுக்கு எதி்ராக நடாத்தப்பட்டது மற்றும் நடாத்தப்பட்டுக்... Read more »

கொழும்பு அரசியலில் பரபரப்பு

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கும் இடையில் விசேட பேச்சு இடம்பெற்றுள்ளது. இந்தப் பேச்சு, இந்தோனேசியாவுக்கு ஜனாதிபதி ரணில் விஜயம் மேற்கொண்டிருந்தபோது அங்கு சந்திரிகாவை அவர் சந்தித்தபோதே இடம்பெற்றுள்ளது. இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இருவருக்கும் இடையிலான சந்திப்பு... Read more »

ரணிலை நேரில் பாராட்டிய சித்தார்த்தன்

“ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்திக்காகப் பல பணிகளைச் செய்துள்ளார்.” இவ்வாறு புளொட் கட்சியின் தலைவரும் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்துக்காக யாழ். நகரில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட எட்டு மாடிகளைக் கொண்ட... Read more »

சீரற்ற காலநிலையால் டெங்கு பரவும் அபாயம்

இலங்கையில் நிலவும் மழையுடனான சீரற்ற காலநிலை காரணமாக டெங்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்று  டெங்கு நோய் கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. நாட்டில் இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 24 ஆயிரத்து 227 டெங்கு நேயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று டெங்கு நோய்... Read more »

யாழ் பல்கலைக்கழகத்தின் கோரிக்கைகள் அனைத்தும் ஜனாதிபதியின் முழுமையான ஒத்துழைப்புடன் நிறைவேற்றித் தருவேன் – அமைச்சர் டக்ளஸ்

யாழ்ப்பாணம் மருத்துவ பயிற்சி மற்றும் ஆராய்ச்சித் தொகுதியினை மேலும் மேம்படுத்தும் வகையில் சுமார் 1265 மில்லியன் ரூபா திட்டங்கள் தன்னிடம் முன்வைக்கப்பட்டுள்ளதாக  தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் முழுமையான ஒத்துழைப்புடன் குறித்த திட்டங்களை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பேன் என்றும் உறுதிபடத்... Read more »

சிறப்பாக இடம் பெற்ற சந்நிதியான் ஆச்சிரம வாராந்த நிகழ்வு…!

யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தின் சைவ கலயு பண்பாட்டு பேரவையின் வாராந்த நிகழ்வு நேற்று காலை சந்நிதியான் ஆச்சிரமத்தில் ஆச்சிரம முதல்வர் கௌரவ கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் தலமையில் பஞ்ச புராண ஓதலுடன் ஆரம்பமானது. தொடர்ந்து செஞ்சொற் செல்வர் செல்வவடிவேல் அவர்களின் மகாபாரதம்... Read more »

நெடுந்தீவு, நைனாதீவு உட்பட கடற்போக்குவரத்து இன்று நிறுத்தம், வானிலை ஏச்சரிக்கை..!

வானிலையில் இன்று ஏற்படக்கூடிய மாற்றம் காரணமாக குறிகட்டுவானிலிருந்து இடம் பெறும் குறிகட்டுவான் நெடுந்தீவு, குறிகட்டுவான் நைனாதீவு உட்பட அனைத்து கடற் போக்குவரத்துக்கள் இடம் பெறாதென யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன் விபரம் வருமாறு. 2024 May 24... Read more »

இன்றைய ராசி பலன், குரோதி வருடம் வைகாசி 12, மே மாதம் 25/2024, சனிக்கிழமை..!

*_꧁‌. 🌈 வைகாசி: 𝟭𝟮 🇮🇳꧂_* *_🌼 சனிக்கிழமை_ 🦜* *_📆  𝟮𝟱• 𝟬𝟱 • 𝟮𝟬𝟮𝟰 🦚_* *_🔎  ராசி- பலன்கள்  🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_🔯 மேஷம் -ராசி: 🐐🐐_* வெளியுலக அனுபவங்களால் மாற்றம் பிறக்கும். எதிலும் சிக்கனமாக செயல்படுவது நல்லது. சுப காரியம்... Read more »

பப்புவா நியூ கினியாவில் நிலச்சரிவு – 100 பேர் பலி!

பப்புவா நியூ கினியாவில் நேற்று  வெள்ளிக்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 100-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக ஆஸ்திரேலிய ஒலிபரப்பு நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, தென் பசிபிக் தீவு நாட்டின் தலைநகர் போர்ட் மோர்ஸ்பிக்கு வடமேற்கே சுமார் 600... Read more »

மாங்கேணி கடலில் நீராடச் சென்ற ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு…!

மட்டக்களப்பில் கடலில் நீராடச் சென்ற ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, மட்டக்களப்பு, வாகரை பொலிஸ் பிரிவிலுள்ள மாங்கேணி கடலில் நீராடச் சென்ற ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் சடலமாக... Read more »