அதிக ஒலி எழுப்புவோருக்கு எதிராக இனி சட்ட நடவடிக்கை..!

வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் அதிக ஒலி எழுப்பப்படுவதனை கட்டுப்படுத்தும் நோக்கில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வணக்கஸ்தலங்கள் பொது நிகழ்வுகள் மற்றும் வீடுகளில் அதிக ஒலி எழுப்பப்படுவதால் கல்வி கற்கும் மாணவர்கள் வயோதிபர்கள் மற்றும் கற்பிணித் தாய்மார்கள்... Read more »

தையிட்டி விகாரை தொடர்பில் பெளத்த சாசன அமைச்சரை சந்தித்து கலந்துரையாடிய காணிக்கான மக்கள் உரிமை இயக்கம்..!

காணி உரிமைக்கான மக்கள் அமைப்பின் ஏற்ப்பாட்டில் வடமாகாண காணிக்கான மக்கள் உரிமை இயக்கம் பெளத்த சாசன அமைச்சர் பிமல் ரத்னாயக்கவை  சந்தித்தனர். நேற்று (20) மாலை 2.00 மணிக்கு பத்தரமுல்லையில்  அமைந்துள்ள பௌத்த சாசன  அமைச்சின் அலுவலகத்தில் அமைச்சர் பிமல் ரத்னாயக்கா அவர்களை சந்தித்து ... Read more »

வடமராட்சி கிழக்கில் கடற்றொழிலாளருக்கான அடையாள அட்டை..!

வடமராட்சி கிழக்கில் கடற்றொழிலாளர்  அடையாள அட்டை வழங்குதல் தொடர்பான பதிவுகள் இன்று காலை 8  மணியளவில் கடற்றொழிலில் ஈடுபடுபவர்களுக்கான ஆட்ப்பதிவு ஒன்றினை ஆரம்பித்துள்ளனர் குறித்த ஆட்பதிவில் நிரந்தரமாக கடற்றொழிலில் ஈடுபட்டு வருபவர்களின் முழுமையான தகவல்கள் சேகரிக்கப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டது. கடற்றொழிலில் ஈடுபடுவபவர்களுக்கான அடையாள அட்டை வழங்குதல்... Read more »

லண்டன் பெண்ணுக்கு யாழில் நேர்ந்த துயரம் – நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு!

யாழில் வெளிநாட்டு பெண்ணுடன் தகாத முறையில் ஈடுபட்ட அரச பேருந்து நடத்துனர் ஒருவர் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், லண்டனில் இருந்து யாழ். வந்த 27 வயதுடைய சுற்றுலாப் பயணி ஒருவர் நேற்றையதினம் நயினாதீவு செல்வதற்காக அரச பேருந்து ஒன்றில் குறிகட்டுவான்... Read more »

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 11,081 குடும்பங்களுக்கு காணிகள் இல்லை!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 11 ஆயிரத்து 81 குடும்பங்கள் தமக்குக் காணிகள் இல்லை என்றும், காணிகளை வழங்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளன என்று யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, கடந்த 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டு காலப்பகுதியில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள 15... Read more »

வடக்குக்கு ஒதுக்கப்பட்ட நிதியை விரைவாகவும், வினைத்திறனாகவும் பயன்படுத்துவது குறித்து கலந்துரையாடல்!

வடக்கு மாகாணத்துக்கு அதிகளவான நிதி பல்வேறு வகையிலும் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் அவற்றை வினைத்திறனாகவும், ஒருங்கிணைந்தும், விரைவாகவும் நிறைவேற்றுவது தொடர்பாக கடற்றொழில் நீரியல்வளத்துறை கௌரவ அமைச்சர் இ.சந்திரசேகரன் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் ஆகியோர் இணைத் தலைமையில் விசேட கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் இன்று... Read more »

யாழில் க.பொ.த சா/த பரீட்சை எழுதிய முதல்நாளில் மாணவ, மாணவிகளிடம் மர்மநபர்கள் அத்துமீறல்!

யாழ்ப்பாணத்தில் க.பொ.த.சாதாரணதரப் பரீட்சை எழுதிவிட்டுத் திரும்பிய மாணவ, மாணவிகளிடம் உயர்தர வகுப்புகளுக்கான விளம்பரக் கையேடுக ளைப் பெற்றுக்கொள்ளுமாறு மர்ம நபர்கள் நேற்று பலவந்தமாகத் திணித்துள்ளனர். வன்முறைக் குழுக்களில் உள்ளவர்களைப் போன்ற தோற்றத்தில் இருந்த அவர்கள், மாணவிகளுக்கு நெருக்கமாகவும், அவர்களின் கைகளைப் பிடித்து இழுப்பது போன்றும்... Read more »

யாழில் கட்டுப்பணத்தை செலுத்திய சுயேட்சை குழு!

நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபை தேர்தலில் யாழ்ப்பாணம் மாநகர சபை, கோப்பாய் பிரதேச சபை மற்றும் வேலணை பிரதேச சபை ஆகிய மூன்று சபைகளிலும் தொழிலதிபர் ஞானப்பிரகாசம் சுலக்சன் தலைமையிலான சுயேட்சை குழு போட்டியிடவுள்ளது. குறித்த சபைகளில் போட்டியிடுவதற்காக யாழ். மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம்... Read more »

மனைவியை பிரிந்து வாழ்ந்தவர் யாழில் மரணம்!

மனைவியை பிரிந்து வாழ்ந்த குடும்பஸ்தர் ஒருவர் நேற்றையதினம் யாழ்ப்பாணத்தில் உயிரிழந்துள்ளார். வவுனியா – மருதங்குளம் பகுதியைச் சேர்ந்த எம்.யோகராசா (வயது 40) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், ஒரு பிள்ளையின் தந்தையான இவர் நீண்ட காலமாக மனைவியை பிரிந்து யாழ்ப்பாணத்தில்... Read more »

யாழில் இளைஞன் மீது தாக்குதல்!

வட்டு வடக்கு, சித்தங்கேணி ஜே/158 கிராம சேவகர் பிரிவில் வசிக்கும் இளைஞர் மீது 09.03.2025 அன்று தாக்குதல் நடாத்தப்பட்டுள்ள நிலையில் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் வீடு திரும்பினார். இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட இளைஞன் கருத்து தெரிவிக்கையில், கடந்த மார்ச் மாதம்... Read more »