
நாட்டில் ஆட்சிக் கவிழ்ப்பை முன்னெடுப்பதற்காக பலர் மே 9 காலிமுகத்திடல் பேராட்டத்திற்கு வழிவகுத்ததாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார் ஊடகங்களுக்கக் கருத்தத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மே 9 தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் 2 வருடங்கள் பூர்த்தியாகின்றன.... Read more »

கேகாலை பிரதேசத்தில் தந்தையின் ஆண் உறுப்பை வெட்டிக் காயப்படுத்தியதாகக் கூறப்படும் இளைய மகன் ரம்புக்கனை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ரம்புக்கனை பிரதேசத்தைச் சேர்ந்த 58 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையொருவரே இச் சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளார். இவர் நீண்ட நாட்களாகத் தனது மனைவியுடன் தகராறில்... Read more »

அரசாங்க நிர்வாக அதிகாரிகள் இன்று முன்னெடுக்கின்ற போராட்டம் காரணமாக லோட்டஸ் வீதியின் போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது சம்பளப் பிரச்சினை உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து இன்று மற்றும் நாளையும் சுகயீன விடுமுறையை அறிவித்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக அரசாங்க நிறைவேற்று அதிகாரிகளின்... Read more »

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் 1,700 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கொட்டகலையில் இடம்பெற்ற மே தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். பெருந்தோட்ட தேயிலை தொழிலாளர்களின் குறைந்தபட்ச நாளாந்த வேதன அதிகரிப்பு தொடர்பான அதிவிசேட வர்த்தமானியை ... Read more »

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சர்வதேச காலநிலை ஆலோசகரும், முன்னாள் நோர்வே வெளிவிவகார அமைச்சருமான எரிக் சொல்ஹெய்ம் வடக்கு மாகாண ஆளுநர் பி. எஸ். எம். சார்ள்ஸை நேற்று மாலை சந்தித்து கலந்துரையாடினார். வடக்கு மாகாண ஆளுநரின் யாழ்ப்பாணத்திலுள்ள உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.... Read more »

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியை சேர்ந்த பெண் தலைமைத்துவ குடும்பத்தின் ஆடு ஒன்றை திருடி இறைச்சிக்காக வெட்டிய சம்பவம் ஒன்று நேற்று (29.04.2024) கட்டைக்காடு பகுதியில் இடம்பெற்றுள்ளது. கணவனை இழந்த குறித்த பெண் தனது இரண்டு பிள்ளைகளுடன் வாழ்ந்து வரும் சூழலில் வாழ்வாதாரத்திற்காக... Read more »

இலங்கைக்கும் கஸகஸ்தானுக்கும் இடையில் இருதரப்பு விமானப் போக்குவரத்து ஒப்பந்தம் கைச்சாத்திட அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. கஸகஸ்தானுக்கும் இலங்கைக்கும் இடையிலான விமான சேவைகளை மேம்படுத்தும் வகையில், இரு நாடுகளின் விமான மற்றும் வழிசெலுத்தல் அதிகாரிகளுக்கு இடையில் விமான சேவை ஒப்பந்தத்தில் கையெழுத்திட 13.5.2015 அன்று நடைபெற்ற... Read more »

வலம்புரி பத்திரிகையில் வெளிவந்த ஆசிரியர் தலையங்கத்தை அடிப்படையாக கொண்டு அப்பத்திரிகையின் பிரதம ஆசிரியர் மீது மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டின் பெயரில் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளமை தமிழர்களின் குரல்வளையை நெரித்து தமிழர்களின் குரலை மௌனிக்கச் செய்யும் உச்சபட்ச அடக்குமுறையின் வெளிப்பாடாகும். இது தொடர்பில் யாழ் வடமராட்சி ஊடக இல்லம்... Read more »

4 கிலோ தங்கம் என சந்தேகிக்கும் பொருளுடன் மூவர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இராணுவப் புலனாய்வு பிரிவிற்கு கிடைக்கப்பெற்ற தகவலிற்கு அமைவாக கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயமருகில் இரவு 11 மணியளவில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. விசேட அதிரடிப்படையினர் குறித்த வாகனத்தை சோதனை மேற்கொண்ட போது காரில்... Read more »

தெஹிவளை உள்ளிட்ட கொழும்பின் பல பகுதிகளில் இன்றையதினம்(27) 14 மணித்தியால நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. இதன்படி, இன்று(27) மாலை 5 மணி முதல் நாளை(28) காலை 7 மணி வரை நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது.... Read more »