
ஐக்கிய அரபு இராஜியத்தின் இலங்கைக்கான தூதுவருக்கும், வடக்கு மாகாண கௌரவ ஆளுநருக்கும் இடையில் சந்திப்பு
ஐக்கிய அரபு இராஜியத்தின் இலங்கைக்கான தூதுவர் எச்.ஈ.கலிட் நாசர் சுலைமான் அல்அமீரி (H.E. Khaled NasserSulaiman AlAmeri), வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களை நேற்று சந்தித்து கலந்துரையாடினார். யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் விடுதியொன்றில் நேற்று (01.03.2024) மாலை இந்த சந்திப்பு நடைபெற்றது. வடக்கு... Read more »

மஸ்கெலியா பிரதான வீதியில் உள்ள மரக்கறி விற்பனை நிலையம் ஒன்றிலும் பேருந்து தரிப்பிட வீதியிலுள்ள இரண்டு வர்த்தக நிலையங்களின் பூட்டு உடைக்கப்பட்டு பணம் சூறையாடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று(01) நள்ளிரவில் இடம்பெற்றுள்ளது. மேலும், இது குறித்து சம்பந்தப்பட்ட வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள் மஸ்கெலியா பொலிஸ்... Read more »

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் வடமாகாண சட்டத்தரணிகளுக்கான சட்ட மாநாடும், தொழில் வான்மை விருத்தி தொடர்பான கருத்தரங்கும் இன்று யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் சிரேஸ்ட சட்டத்தரணி த.தவராசா தலைமையில் நடைபெற்றது. இவ் கருத்தரங்கு மாநாட்டுக்கு பிரதம அதிதியாக இலங்கை உயர்நீதிமன்ற நீதியரசர்... Read more »

வவுனியா வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் எதிர்வரும் சிவராத்திரி தினத்தில் முன்னெடுக்கப்படவுள்ள வழிபாட்டை குழப்புவதற்கு பௌத்த பீடம் ஒன்றின் பிக்குமார்களால் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் தவபாலன் குற்றம் சுமத்தியுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, எதிர்வரும்... Read more »

சாந்தனின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக யாழ் பல்கலைக் கழக வளாகமெங்கும் இன்றையதினம்(02) கறுப்பு கொடிகள் பறக்க விடப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி 33 வருடங்கள் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட ஈழத்தமிழர் சாந்தன்,... Read more »

இலங்கை நீதிமன்றங்களில் தமிழருக்கு நீதி கிடைக்காது என்பவர்கள் தமக்கு நீதி கிடைக்க நீதிமன்றங்களை நாடுவது வேடிக்கையானது என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை அரசு தமிழருக்கு நீதியும் வழங்காது தீர்வும் தராது என்றவர்கள், இலங்கை... Read more »

சாந்தனின் உடல் நேற்றையதினம்(01) இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட நிலையில் சாந்தனின் இறுதிக்கிரியைகள் நாளை(03) இடம்பெறவுள்ளதாக நேற்றையதினம் செய்திகள் வெளியாகியிருந்த நிலையில் இறுதிக் கிரியை இடம்பெறுவது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என அவரது சகோதரர் மதிசுதா தெரிவித்துள்ளார். அவரது பூதவுடலுக்கு மீள் உடற் கூற்றுப் பரிசோதனை செய்யப்... Read more »

வடமாகாண மாகாணத்தின் வேக நடை போட்டியில் ஆண்கள் பிரிவில் கிளிநொச்சி முதலிடமும் பெண்கள் பிரிவில் யாழ் மாவட்டம் முதல் இடத்தையும் பெற்றுள்ளது. வடமாகாண மாகாணத்தின் வேக நடை போட்டியில் ஆண்கள் பிரிவில் கிளிநொச்சி முதலிடமும் பெண்கள் பிரிவில் யாழ் மாவட்டம் முதல் இடத்தையும் பெற்றுள்ளது.... Read more »

இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் அரங்கேறி 5 ஆண்டுகள் பூர்த்தியாகவுள்ள நிலையில் நேற்றையதினம் காத்தான்குடியில்குறித்த தாக்குதல்களுடன் தொடர்புடைய மேலும் 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளமை பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. எதிர்வரும் 31 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், இந்த தாக்குதல் மற்றுமொருபயங்கர... Read more »

தமிழகத்தில் உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ள சாந்தனுக்கு நீதி கோரி யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைதூதரகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. குறித்த போராட்டமானது, யாழ் மருதடி வீதியிலுள்ள இந்திய துணை தூதரகம் முன்பு நாளை மறுதினம் 03.03.2024 காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது. “இந்திய -திராவிட கூட்டுச்... Read more »