நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் அதிகரிப்பு..!

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலுள்ள  நீரேந்து பகுதிகளில் மழையுடன் கூடிய வானிலை நிலவுவதால் நீர்த்தேக்கங்கள் பலவற்றின் நீர்மட்டம் குறிப்பிடத்தக்களவு உயர்வடைந்துள்ளது. இதனால், நோட்டன் பிரிட்ஜ் விமலசுரேந்தி நீர்த்தேக்கம் வான் பாய ஆரம்பித்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை, காசல்ரீ மற்றும் மவுஸ்ஸாகலை நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும்... Read more »

தொழிற்சங்க நடவடிக்கை இடைநிறுத்தம்- ஊதிய உயர்வுக்கு இணக்கம்…!

பிரதமருடனான கலந்துரையாடலின் பின்னர் தமது தொழிற்சங்க நடவடிக்கையை தற்காலிகமாக நிறுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக இலங்கை நிர்வாக சேவைகள் சங்கம் தெரிவித்துள்ளது. ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் கொடுப்பனவுகளை அதிகரிப்பதற்கு இணக்கம் காணப்பட்டதாக சங்கத்தின் தலைவர் மகேஷ் கம்மன்பில தெரிவித்தார். சம்பள... Read more »

உயிரிழந்த கடற்படை வீரருக்கு யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர்கள் இரங்கல்!

யாழ்ப்பாணம் – நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்களை கைதுசெய்வதற்கு முற்பட்ட இலங்கை கடற்படை வீரர் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், இது ஓர்  துன்பியல் சம்பவம் என யாழ் மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசங்களின் சம்மேளனத் தலைவர் ஸ்ரீ கந்தவேல்... Read more »

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றிணை இன்றைய தினம் முன்னெடுத்திருந்தனர். குறித்த போராட்டம் இன்று காலை 10.00 மணியளவில் கந்தசுவாமி ஆலய முன்றலில் முன்னெடுக்கப்பட்டது. அரை மணித்தியாலயங்கள் வரை குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. சர்வதேச விசாரணைதேவை,... Read more »

திடீர் சுற்றிவளைப்பில் சிக்கிய 30 வெளிநாட்டவர்கள்

நீர்கொழும்பில், இணையத்தின் ஊடாக சட்டவிரோதமான முறையில் நிதி கொடுக்கல் வாங்கல்களை நடத்தியதாக கூறப்படும், இரண்டு நிலையங்கள் சுற்றிவளைக்கப்பட்டு 30 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் நேற்று  இரவு இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். கைது செய்யப்பட்ட வெளிநாட்டவர்களில், சீனா, பிலிப்பைன்ஸ், மாலைத்தீவு,... Read more »

இந்த வாரம் முதல் முன்பள்ளி ஆசிரியர் கொடுப்பனவு அதிகரிப்பு..!

முன்பள்ளி ஆசிரியர்களின் கொடுப்பனவை 2,500 ரூபாவினால் அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். அதிகரிக்கப்பட்ட கொடுப்பனவு இந்த வாரம் முதல் அமுலுக்கு வரும் என ஜனாதிபதி குறிப்பிட்டார். மட்டக்களப்பு – செங்கலடி பிரதேசத்தில் பாடசாலைகளை விட்டு வெளியேறியவர்கள் மற்றும் வேலையற்ற... Read more »

நாட்டில் இன்றும் கனமழை

நாட்டின் காலநிலை மாற்றம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில... Read more »

சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ளார்

மொனராகலை – கராடுகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ளதாக கராடுகல பொலிஸார் தெரிவித்தனர். கராடுகல பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய சிறுமியொருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார். இவர் கடந்த (23) ஞாயிற்றுக்கிழமை காணாமல்போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சிறுமி தனது... Read more »

இந்தியப் படகு மோதி இலங்கை கடற்படை வீரர் பலி

யாழ்ப்பாணம் – நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்களை பிடிக்கச் சென்ற  இலங்கை கடற்படை வீரர் ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார். ரத்நாயக்க என்ற கடற்படை வீரரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இதன்போது 10 இந்திய மீனவர்களும் ஒரு படகும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. சம்பவம்... Read more »

ஓமந்தையில் மரக்கடத்தல் வாகனம் மீது பொலிசார் துப்பாக்கி சூடு

வவுனியா, ஓமந்தைப் பகுதியில் மரக்கடத்தலில் ஈடுபட்ட வாகனம் நிறுத்தாது சென்றமையால் துப்பாக்கிச் சூடு நடத்தி பல இலட்சம் பெறுமதியான மரங்களை கைப்பற்றியுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். வவுனியா பிரதி பொலிஸ் மா அதிபர் சாமந்த விஜயசேகர அவர்களுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், சிரேஷ்ட பொலிஸ்... Read more »