
பதுளை – சொரணதொட்ட பகுதியில் இன்று ஏற்பட்ட பாரவூர்தி விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பாரவூர்தி வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியின் நடுவே, கவிழ்ந்ததில் விபத்து நேர்ந்துள்ளது. அத்துடன், இந்த விபத்தில் காயமடைந்த மூவர் பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் நிலை... Read more »

பிரித்தானியா தேர்தலில் லேபர் கட்சி சார்பாக போட்டியிட்ட உமா குமாரன் அவர்கள், 19,145 வாக்குகளை பெற்று பெரும் வெற்றியடைந்துள்ளார். இவர் ஈழத் தமிழ் பெண் என்பது உலகத் தமிழர்களுக்கு பெருமை சேர்க்கும் விடையம். பிரித்தானிய வரலாற்றில் முதல் தமிழ் MP உமா குமரன் ஆவார்.அதுவும்... Read more »

பெருந்தலைவர் சம்பந்தனின் இறுதிக் கிரியைகள் ஜூலை 7 திருகோணமலையில் நடைபெறவுள்ள நிலையில், தமிழ்நாட்டின் அரசியல் தலைவர்கள் அதில் கலந்து கொள்ளவுள்ளார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தியாவின் ஆளும் கட்சியான பாரதீய ஜனதாக் கட்சியின் தமிழ் நாட்டுத் தலைவர் அண்ணாமலை இறுதி நிகழ்வுகளில் கலந்துகொள்வார் என்று உறுதிப்படுத்தப்பட்டதாக... Read more »

பொலன்னறுவை – ஹபரணை பிரதேசத்தில் ஆயுர்வேத மசாஜ் நிலையங்கள் என்ற போர்வையில் தகாத தொழில் நடவடிக்கையில் ஈடுபட்ட விடுதிகள் முற்றுகையிடப்பட்டன. இதன்போது நான்கு முகாமையாளர்கள் மற்றும் சேவை வழங்கிய 11 பெண்களும் கைது செய்யப்பட்டதாக பொலன்னறுவை பிரிவு குற்றப்புலனாய்வு பிரிவினர் தெரிவித்தனர். ஹிங்குரகொட நீதிமன்றில்... Read more »

கண்டி – மாத்தளை பிரதான வீதி (A9) தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அக்குரணை நகரில் உள்ள சிற்றுண்டிச்சாலையில் தீ பரவல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மாத்தளை – கண்டி பிரதான வீதியை தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, தீயை கட்டுப்படுத்தும் பணி ... Read more »

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மனைவி மற்றும் மகள்களின் ஒன்பது கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான 16 நிலையான வைப்புக்கணக்குகள் மற்றும் மூன்று ஆயுள் காப்புறுதிப்பத்திரங்களை முடக்க இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது. சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனைகள் காரணமாக தனியார் வங்கியொன்றின் கணக்குகள்... Read more »

ஜனாதிபதி தேர்தலை பிற்போட வேண்டும் என்பதே எனது கருத்து என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தேசிய அரசாங்கம் அமைப்பது நாட்டுக்கு நல்லது. ஆனால் தமிழ்க் கட்சிகள் தேசிய அரசாங்கத்தில்... Read more »

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவரான இராஜவரோதயம் சம்பந்தனது பூதவுடல் யாழ்ப்பாணத்தில் இருந்து இன்றையதினம்(05) விமானம் மூலம் திருகோணமலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. யாழ்ப்பாணத்தில் உள்ள தந்தை செல்வா கலையரங்கில் சம்பந்தனின் பூதவுடலுக்கு நேற்று பலரும் அஞ்சலி செலுத்திய நிலையில் அஞ்சலி நிறைவுக்கு வந்து... Read more »

ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் பாலித ரங்கே பண்டாரவின் மகன் யசோத ரங்கே இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார். வாகன விபத்து ஒன்றை ஏற்படுத்தியமை தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இன்று (29) அதிகாலை 4.30 மணியளவில் கருவலகஸ்வெவ 07 ஆம்... Read more »

இலங்கை மீண்டும் கடன் வலையில் வீழ்ந்துவிடும் அபாயம் காணப்படுவதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்துள்ளதாக தென்னிலங்கை ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த செய்தியில், இம்மாதம் முதல் இருபத்தி இரண்டு நாட்களில் மாத்திரம் இலங்கை அரசாங்கம் உள்ளுர் திறைசேரி... Read more »