ஐ.நா இணைப்பாளர்- அமைச்சர் டக்ளஸ் கொழும்பில் சந்திப்பு…!

ஐக்கிய நாடுகளுக்கான இலங்கைக்கான வதிவிட இணைப்பாளர் மார்க் அன்ரூ பிரன்ச் – கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்றையதினம்(25) கொழும்பில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். கொழும்பு மாளிகாவத்தையிலுள்ள கடற்றொழில் அமைச்சின் அலுவலகத்தில் நடைபெற்ற இச் சந்திப்பில், கடற்றொழிலாளர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் அது தொடர்பாக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள்... Read more »

தங்கராசா ஐங்கரதீபன் சமாதான நீதவானாக சத்தியப்பிரமாணம்…..!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு அம்பன் கிழக்கு, கொட்டைடையை சொந்த இடமாகவும், தற்போது ஏழாலை மத்தியை வதிவிடமாகவும் கொண்ட தங்கராசா ஐங்கரதீபன் சமாதான நீதவானாக கடந்த 18/06/2024 அன்று மல்லாகம் கௌரவ மாவட்ட நீதிபதி பெ.சிவகுமார் முன்னிலையில் அகில இலங்கை சமாதான நீதவானாக சத்தியப் பிரமாணம்... Read more »

நாளை மாபெரும் போராட்டத்திற்கு அழைப்பு

நாளைய சுகயீன விடுமுறைப் போராட்டத்திற்கு ஒத்துழைக்குமாறு அதிபர்கள், ஆசிரியர்களுக்கு இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது. இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் நிர்வாகச் செயலாளர் சி. சசிதரன் இன்று(25.05.2024) வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில், சம்பள உயர்ச்சிக்காக ஒருநாள்... Read more »

விடுதலைப் புலிகளுக்கு அறிவித்தல் அனுப்பிய இந்தியாவின் தீர்ப்பாயம்!

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை ‘சட்டவிரோத அமைப்பு என்று ஏன் பிரகடனப்படுத்தக் கூடாது?’ என்பதற்கான காரணங்களை விளக்குமாறு, விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு இந்தியாவின் தீர்ப்பாயம் ஒன்று அறிவித்தல் அனுப்பியுள்ளது. டெல்லி மேல் நீதிமன்றில் இயங்கும் சட்டவிரோத செயற்பாடுகளைத் தடுக்கும் சட்டத் தீர்ப்பாயம் கடந்த 14ம்... Read more »

வினாத்தாள் திருத்தலுக்கான கொடுப்பனவுகள் அதிகரிப்பு?

கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை மற்றும் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைகளின் திருத்தலுக்கான கொடுப்பனவுகளை அதிகரிப்பதற்கான உபகுழுவின் பரிந்துரை கிடைத்துள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இந்த பரிந்துரைகள் அமைச்சரவையின் ஒப்புதலுக்கு சமர்ப்பிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more »

நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் அதிகரிப்பு..!

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலுள்ள  நீரேந்து பகுதிகளில் மழையுடன் கூடிய வானிலை நிலவுவதால் நீர்த்தேக்கங்கள் பலவற்றின் நீர்மட்டம் குறிப்பிடத்தக்களவு உயர்வடைந்துள்ளது. இதனால், நோட்டன் பிரிட்ஜ் விமலசுரேந்தி நீர்த்தேக்கம் வான் பாய ஆரம்பித்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை, காசல்ரீ மற்றும் மவுஸ்ஸாகலை நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும்... Read more »

தொழிற்சங்க நடவடிக்கை இடைநிறுத்தம்- ஊதிய உயர்வுக்கு இணக்கம்…!

பிரதமருடனான கலந்துரையாடலின் பின்னர் தமது தொழிற்சங்க நடவடிக்கையை தற்காலிகமாக நிறுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக இலங்கை நிர்வாக சேவைகள் சங்கம் தெரிவித்துள்ளது. ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் கொடுப்பனவுகளை அதிகரிப்பதற்கு இணக்கம் காணப்பட்டதாக சங்கத்தின் தலைவர் மகேஷ் கம்மன்பில தெரிவித்தார். சம்பள... Read more »

உயிரிழந்த கடற்படை வீரருக்கு யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர்கள் இரங்கல்!

யாழ்ப்பாணம் – நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்களை கைதுசெய்வதற்கு முற்பட்ட இலங்கை கடற்படை வீரர் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், இது ஓர்  துன்பியல் சம்பவம் என யாழ் மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசங்களின் சம்மேளனத் தலைவர் ஸ்ரீ கந்தவேல்... Read more »

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றிணை இன்றைய தினம் முன்னெடுத்திருந்தனர். குறித்த போராட்டம் இன்று காலை 10.00 மணியளவில் கந்தசுவாமி ஆலய முன்றலில் முன்னெடுக்கப்பட்டது. அரை மணித்தியாலயங்கள் வரை குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. சர்வதேச விசாரணைதேவை,... Read more »

திடீர் சுற்றிவளைப்பில் சிக்கிய 30 வெளிநாட்டவர்கள்

நீர்கொழும்பில், இணையத்தின் ஊடாக சட்டவிரோதமான முறையில் நிதி கொடுக்கல் வாங்கல்களை நடத்தியதாக கூறப்படும், இரண்டு நிலையங்கள் சுற்றிவளைக்கப்பட்டு 30 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் நேற்று  இரவு இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். கைது செய்யப்பட்ட வெளிநாட்டவர்களில், சீனா, பிலிப்பைன்ஸ், மாலைத்தீவு,... Read more »