
டெல்டா மாறுபாடு தொற்று காரணமாக நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலையில் , கோவிட் கட்டுப்பாடுகளை தளர்த்துவது “எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போன்றது ” என்று மருத்துவ நிபுணர்கள் சங்கம் (AMS) தெரிவித்துள்ளது. ஏஎம்எஸ் தலைவர் டாக்டர் லக்குமார் பெர்னாண்டோ, தடுப்பூசி இலக்குகளை அடைந்து... Read more »

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழாவை முன்னிட்டு கொடிச்சீலை வடிவமைப்பாளர்களிடம் காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு இன்று(03.08.2021) காலை இடம்பெற்றது. வள்ளியம்மை திருக்கல்யாணப் படிப்புடன் பந்தற்கால் நாட்டுதல் நடைபெற்று பாரம்பரிய முறைப்படி கொடிச்சீலை வழங்கும் மரபுடையவர்களிற்கான காளாஞ்சி மாட்டுவண்டில் மூலம் நல்லூரிலிருந்து கல்வியங்காட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டு கலாச்சார... Read more »

யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பினால் அவசர சிகிச்சை பிரிவு உட்பட சிகிச்சை பிரிவுகள் நிரம்பியிருப்பதாக சுட்டிக்காட்டியிருக்கும் யாழ்.போதனா வைத்தியசாலை பதில் பணிப்பாளர், வைத்திய கலாநிதி ஸ்ரீபவானந்தராஜா, ஒட்சிசன் தேவையும் அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டியிருப்பதுடன், பொதுமக்கள் தற்போதைய அபாய நிலையை உணர்ந்து பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ளவேண்டும்... Read more »

நாடு முழுவதும் பொது மக்களிடையே அமைதியை நிலைநாட்ட அனைத்து இராணுவப் படையினரையும்பொது அழைக்குமாறு ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ விசேட உத்தரவு பிறப்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன ஜனாதிபதியால் எடுக்கப்பட்ட முடிவு குறித்து இன்று பாராளு மன்றத்தில் தெரிவித்துள்ளார். பொதுப் பாதுகாப்புச் சட்டம்... Read more »

பருத்தித்துறை பஸ் தரிப்பு நிலையத்திற்கு முன்பாக நடைபெறவுள்ள போராட்டத்தில் அதிபர்கள், ஆசிரியர்கள் போன்றோரை கலந்து கொள்ளுமாறு இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கத்தின் வடமராட்சி கல்வி வலய செயலாளர் சு.யசீலன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் வடமாகாணத்தைச் சேர்ந்த, வடமராட்சி வலயங்களைச் சேர்ந்த... Read more »

அண்மையில் மட்டக்களப்பின் சமூக ஆர்வலரும், வரலாற்றுப் பட்டதாரியுமான திரு.வை.சத்தியமாறன் இணையதளம் ஒன்றில் அம்பாறை மாவட்டத்தில் உளள புராதன சிவன் ஆலயம் ஒன்றின் புகைப்படங்களைப் பிரசுரித்து அவ்வாலயம் தமிழர்களால் பாதுகாக்கப்படவேண்டும் என்ற தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார். அப்புகைப்படங்களில் இருந்து அது ஒரு புராதன ஆலயமாக இருக்கலாம்... Read more »

யாழ்.நெல்லியடி நகர் பகுதியில் தொடர்ச்சியாக துவிச்சக்கரவண்டி களவாடிவந்தவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 10 துவிச்சக்கர வண்டிகள் மீட்கப்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமையும் நெல்லியடி நகர் பகுதியில் துவிச்சக்கரவண்டி களவாடப்பட்டிருக்கின்றது. இந்நிலையில் நெல்லியடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரியந்த அமரசிங்க தலமையிலான பொலிஸ் குழுவினர் நடத்திய தேடுதலில், கரவெட்டி... Read more »

வடமாகாண விவசாய அமைச்சின் கீழ் உள்ள வவுனியா மாவட்ட விவசாய திணைக்களத்தின் விதை உற்பத்தி பண்ணையில் பணியாற்றும் விவசாய போதனாசிரியர் ஒருவர் பண்ணை முகாமையாளர் மீது தாக்குதல் நடத்த முயற்சித்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டிருக்கின்றார். குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, யாழ்.மாவட்டத்தை... Read more »

யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன. யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த 83 வயதான ஆண் ஒருவரே கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார். இவர் யாழ்.சுண்டுக்குளி பகுதியை சேர்ந்தவர் என சுகதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன. யாழ்.மாவட்டத்தில் கொரோனா... Read more »

கிளிநொச்சி – முழங்காவில் பகுதியில் வாள்களுடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பிறந்தநாள் கொண்டாட்டம் ஒன்றிற்காக தென்மராட்சி-கொடிகாமம் பகுதியில் இருந்து இளைஞர் குழுவொன்று முழங்காவிலுக்கு சென்றுள்ளது. அங்கு வாள்களுடன் கேக் வெட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்ட நிலையில், அவர்கள்... Read more »